புதன், 2 மார்ச், 2011

நம்மாழ்வார்.






அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?

அனைத்துஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்.
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களைஅனுசரிக்க ஏதுவாக என்னால்முடிந்த அளவு ஒரே இடத்தில். கொடுத்து உள்ளேன்.ஸ்வாமிதேசிகன்அவர்கள் தன்னுடையஅதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறுஎழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே


ஆழ்வார்திருநகரி கோயில்


நம்மாழ்வார்


சடாரி





நம்மாழ்வாரின் சரித்திரம்.

நம்மாழ்வார், 7ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் அவர் சேனைத்தலைவர் அம்சமாகப் பிறந்தார்.
தற்போதுள்ள பாண்டிய நாட்டில் உள்ள ஆழ்வார் திருநகரி என்ற திருக்குருகூர் தலத்தில் அவதரித்தார்.
நம்மாழ்வார், அவதரித்தபோது வாய் திறந்து அழக்கூட இல்லாததால் அவரை இறைவன் திருவடிகளில் சமர்ப்பித்தனர். அவர் தானாகவே தவழ்ந்து சென்று அருகில் உள்ள புளியமரத்தின் பொந்தில் போய் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். அவர் அவ்வாறு 16 ஆண்டு காலம் மோனத்தில் இருந்தார்.
இந்த சமயத்தில் அயோத்தியில் மதுரகவி ஆழ்வார் தெற்குதிசையில் இருந்து ஒரு அதிசய ஒளியைக் கண்டார்
.
அதை நோக்கி தன் பயணத்தை மேற்கொண்டார்.

கடைசியில் நம்மாழ்வார் அமர்ந்து இருந்த புளிய மரத்தை அடைந்தார் .மதரகவியாழ்வாரும் புளிய மரத்தின் பொந்தில் அமர்ந்து

இருந்த சிறுவன் நம்மாழ்வாரைப் பார்த்தவுடன் இவர் இறைவன் அம்சம் எனக் கண்டு கொண்டார்.
நம்மாழ்வாரைப் பேச வைக்க புதிர் ஒன்றை வினவினார்.

"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,
எதைத் தின்று? எங்கே கிடக்கும்?"

இக்கேள்வியைக் கேட்டவுடன், நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடையளித்தார்.

"அதைத் தின்று; அங்கே கிடக்கும்."

அதாவது, "செத்தது" என்பது நம் உடல்; "சிறியது" என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று

தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே

இன்புறும்.அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும். என்று, அந்த உயிர்

உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு,

அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.

பதிலைக் கேட்டதும், மதுரகவியாழ்வாருக்கு, உச்சி குளிர்ந்து, உண்மை விளங்கியது. அப்பதிலால் ஈர்க்கப்பட்ட

மதுரகவியாழ்வார், அந்த கணமே நம்மாழ்வாரின் திருப்பாதத்தில் விழுந்து வணங்கி, "என்னைத் தங்கள் சீடனாக ஏற்று,

இப்பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க அருள் புரிவாய்," என்று வேண்டினார்.

நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரைத் தன் சீடனாக ஏற்று அருள் புரிந்தார். நம்மாழ்வார் பாடும் பாசுரங்களை எல்லாம்

ஏட்டுச்சுவடியில் எழுதியவரும், அதை மதுரமான இசையில் பாடியவரும் நம் மதுரகவியாழ்வாரே. ஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

நம்மாழ்வார் தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயும் போனதில்லை. எம்பெருமானின் 108 திவ்ய தேசங்களைப் பற்றி

நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன்,

தன் கருட வாகனத்தில் காட்சியளித்தனர். அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட (1102) பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,திருவிருத்தம் - இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய சாராம்சங்களை அமைத்துள்ளார்.

திருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது 7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின் அம்சங்களைக்கொடுத்தருளியிருக்கிறார்.

பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின் கருத்துகளை ருசிக்கலாம்.

விருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும. அவை இறைவனின் பெயரில் பா டப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று
அழைக்கப்படுகின்றன.

திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.

இவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று
அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார்.

நம் மாறன், இப்படியே இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று இவருக்காகவே சொர்க்கவாசலைத் திறந்து வைத்திருந்து, நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

நம்மாழ்வார் அரங்கன் மீது 12 பாசுரங்களை இயற்றி உள்ளார்.

நம்மாழ்வார் பற்றி பலரும் வெவ்வேறு தனியன்கள் இயற்றியுள்ளனர்.

கிடாம்பியாச்சான் திருவிருத்தம் பற்றி எழுதிய தனியன்.

கருவிருத்தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து*
ஒருவிருத்தம்புக் குழலுறுவீர்! உயிரின் பொருள்கட்கு*
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோனுரைத்த*
திருவிருத்தத்து ஓரடி கற்றிரீர் திருநாட்டகத்தே.
திருவாய்மொழி பற்றிய தனியன்கள்.

நாதமுனிகள் அருளிச்செய்தது.


பக்தாம்ருதம் விஸ்வ ஜனானு மோதனம்*
ஸர்வாரத்ததம் ஸீஸடகோப வாங்க்மயம்*
ஸகஸ்ர ஸாகோப நிஷத்ஸமாகமம்*
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்

ஈஸ்வர மாமுனிகள் அருளிச்செய்தது.

திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்*
மருவினிய வண்பொரு நல்லென்றும்*-அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே* எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து.


சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது.

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்*
இனத்தாரையல்லா திறைஞ்சேன்,*-தனத்தாலும்
ஏதும் குறைவிலேன்* எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.

அனந்தாழ்வான் அருளிச் செய்தது.

ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமானுசமுனிதன்*
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன்,*-ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன்வேதம்தரிக்கும்,*
பேராத உள்ளம் பெற..

பட்டர் அருளிச் செய்தவை.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்*
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்,*-ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த*
இதத்தாய் இராமுனுசன்.

மிக்க விறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,*
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்*
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,*
யாழினிசை வேதத் தியல்.

நம்மாழ்வாரின் திருவரங்கன் பற்றிய திருவிருத்தம்.

1 தண்ணந் துழாய்* வளை கொள்வது யாமிழப்போம் , நடுவே
வண்ணம் துழாவ* ஓர் வாடையுலாவும்,* வள்வாயலகால் -
புள்நந்துழாமே பொருநீர்த்திருவரங்கா! அருளாய்*
எண்ணந் துழாவுமிடத்து,* உளவோபண்டும் இன்னன்னவே? 2505


திருவாய்மொழி பாசுரங்கள்.

2.கங்குலும் பகலும் கண் துயிலறியாள்* கண்ணநீர் கைகளால் இறைக்கும்,*
சங்கு சக்கரங்களென்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும்*
எங்கனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்* இருநிலம் கை
துழாவிருக்கும்,*செங்கயல் பாய்நீர்த் திருவரங்த்தாய்*
இவள்திறத்து என் செய்கின்றாயே? 3464

3.என்செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா! என்னும்*
கண்ணீர்மல்க இருக்கும்,* என்செய்கேன் எறிநீர் திருவரங்கத்தாய்? என்னும்*
வெவ்வுயிர்த்துயிர் உருகும்,* முன்செய்த வினையே! முகப்பாய் என்னும்*
முகில்வண்ணா! தகுவதோ! என்னும்,* முன்செய்து இவ்வுலகம் உண்டுமிழந்தளந்தாய்!* என்கொலாமுடிகின்றது இவட்கே? 3465

4.வட்கிலன் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும் மையாக்கும்,*
உட்குடை அசுரர் உயிரெல்லாம் உண்ட* ஒருவனே! என்னும் உள்ளுருகும்,*
கட்கிலீ உனனைக் காணுமாறு அருளாய்* காகுத்தா! கண்ணனே! என்னும்,*
திட்கொடி மதிள்சூழ் திருவரங்த்தாய்* இவள் திறத்து என் செய்திட்டாய்? 3466

5.இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும்* எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்,*
'கட்டமே காதல்!' என்று மூர்ச்சிக்கும்* கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*
வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் எனறென்றே மயங்கும்,*
சிட்டனே! செழுநீர்த் திருவரங்த்தாய்!* இவள் திறத்து என் சிந்தித்தாயே? 3467

6.சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்* திருவரங் கத்துள்ளாய்! என்னும்-
வந்திருக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க* வந்திடாய் என்றென்றே மயங்கும்
அந்திப்போது அவுணன் உடலிடந்தானே!* அலைகடல் கடைந்த ஆரமுதே,*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த* தையலை மையல் செய்தானே! 3468

7.மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! என்னும்* மா மாயனே! என்னும்,*
செய்யவாய் மணியே என்னும்* தண்புனல்சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
வெய்யவாய் தண்டு சங்குசக்கரம் வில்லேந்தும் விண்ணோர் முதல்! என்னும்,*
பைகொள் பாம்பணையாய்! இவள் திறந்தருளாய்* பாவியேன் செயற்பாலதுவே 3469

8.பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!* பறறிலார் பற்றநின்றனே,*
கால சக்கரத்தாய்! கடலிடங் கொண்ட* கடல்வண்ணா! கண்ணனே! என்னும்
சேல்கொள் தண்புனல்சூழ் திருவரஙகத்தாய்! என்னும்* என்தீர்த்தனே! என்னும்,*
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்* என்னுடைக் கோமளக் கொழுந்தே.* 3470

9.கொழுந்து வானவர்கட்கு என்னும்* குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்*
அழுந்தொழும் ஆவி அனல்வெவ்வுயிர்க்கும்* அஞ்சன வண்ணனே! என்னும்*
எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*எங்கனே நோக்குகேன்? என்னும்*
செழுந்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!* என் செய்கேன் என் திருமகட்கே? 3471

10.என் திருமகள் சேர்மார்வனே! என்னும்* என்னுடைய ஆவியே! என்னும்*
நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே!
என்னும்* அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்*
தென்திருவரங்கம் கோயில்கொண்டானே!* தெளிகிளேன் முடிவு இவள் தனக்கே. 3472

11.முடிவு இவள் தனக்கொன்றறிகிலேன் என்னும்* மூவுலகாளியே! என்னும்,*
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்* நான்முகக் கடவுளே! என்னும்,*
வடிவுடை வானோர் தலைவனே! என்னும்* வண் திருவரங்கனே! என்னும்*
அடியடையாதாள் போலிவள் அணுகி அடைந்தனள்* முகில்வண்ணன் அடியே. 3473

12.முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்* மொய்புனல் பொருநல்,*
துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்,*வண்பொழில்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்,*
முகில்வண்ணன் சொன்னசொல்மாலை* ஆயிரத்து இப்பத்தும் வல்லார்*,
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே. 3474

ஞாயிறு, 30 ஜனவரி, 2011



அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்"
என்று ஸ்ரீரங்நாதனை நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி
பாடிய பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

திருமழிசையாழ்வார்












திருவெஃகா என்னும் வேக சேது










ஒரு சமயம் ப்ரம்மலோகத்தில்
நாமகள் (சரஸ்வதி) மற்றும் பூமகள் (லக்ஷ்மி) இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
நீ பெரியவளா? நான் பெரியவளா? என்று. ப்ரம்மா சும்மா இல்லாமல்,பூமகள், லக்ஷ்மி தாயார் தான் பெரியவர் என்று தீர்வுசொல்லிவிட்டு போய் விட்டார். இதேபோல எந்த நதி என்று சரஸ்வதி வினவ, ப்ரம்மா விஷ்ணுவின் பாதத்தில் இருந்துபுறப்படும் கங்கை தான் பெரிய நதி என்று பதில் கூறிவிட்டு போய்விட்டார். இதைக் கேட்ட சரஸ்வதி கோபம்
கொண்டுஅங்கிருந்து மறைந்து கங்கைக் கரை ஓரமாகச் தவம் செய்யத் தொடங்கினார்.
நான்முகன், ப்ரம்மா காஞ்சிபுரத்தில்பெரிய அஸ்வமேத யாகம் செய்ய எண்ணி ஸரஸ்வதியை தன்னுடன் இருக்க
அழைத்தார்.இதற்காக தனது மகன் வஷிஷ்டனை ஸரஸ்வதியிடம் அனுப்பினார். ஆனால் கோபம் குறையாத ஸரஸ்வதி உடன்வர மறுத்துவிடுகிறார்.எனவே ப்ரம்மதேவன் மற்ற மனைவிமார்களுடன் யாகத்தை துவக்கிவிடுகிறார்.
இதைப் பார்த்த அசுரர்கள் யாகத்தை குலைக்க எண்ணி ஸரஸ்வதியிடம் சென்று விஷயத்தை சொல்லி கோபத்தைஅதிகரிக்கின்றனர். ப்ரம்மதேவன் மீது கோபம் கொண்ட ஸரஸ்வதி "வேகவதி" என்ற நதியாகப் பிறளயமாக தெற்கு நோக்கி
புறப்பட்டு யாகத்தை அழிக்க வருகிறார். இதைக் ஸீமன் நாராயணன் யாகத்தை காக்க ஆதிசெஷனுடன் ஆற்றின் குறுக்கே படுத்து ஆற்றின் வேகத்தை தடுத்து நிறுத்துகிறார்.எனவே இங்கு பெருமாள் "வேக சேது" என்று அழைக்கப்படுகிறார்.

நான்முகன் திருவந்தாதி.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதியிலும் அரங்கனைப் பற்றி 4 பாசுரங்களை இயற்றிஉள்ளார்.

திருமழிசையாழ்வார் பற்றி சீராப்பிள்ளை அவர்களின் தனியன்.

நாராயணன் படைத்தான் நான்முகனை*
நான்முகனுக்கு ஏரார் சிவன்பிறந்தான் என்னும்சொல்*
சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே*
மொய்பூமழிசைப் பரனடியே வாழ்தது.

1 பாலில் கிடந்ததுவும்* பண்டரங்கம் மேயதுவும்*
ஆலில் துயின்றதுவும் ஆரறிவார்*
ஞாலத்து ஒரு பொருளை* வானவர் தம் மெய்ப்பொருளை
அப்பில் அருபொருளை* யானறிந்தவாறு? 2384 3

2 அவன் என்னையாளி* அரங்கத்து அரங்கில்*
அவனென்னை எய்தாமல் காப்பான்*
அவன் என்னது உள்ளத்த* நின்றான் இருந்தான் கிடக்குமே*
வெள்ளத்தரவணையின் மேல். 2411 30
3. நாகத்தணைக் குடந்தைது* வெஃகா திருஎவ்வுள்*
நாகத்தணை அரஙகம் பேரன்பில்*
நாகத்தணை பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான். 2417 36

4 ஆட்பார்த்து உழிதருவாய்*கண்டுகொள் என்று *
நின்தாள் பார்த்து உழிதருவேன்* தன்மையை*
கேட்பார்க்கு அரும்பொருளாய் நின்ற* அரஙகனே*
உன்னை விரும்புவதே* விள்ளேன் மனம். 2441

வியாழன், 20 ஜனவரி, 2011



அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?

அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்

"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉ
ள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

திருமழிசையாழ்வார

திருமழிசை என்னும் ஊரில் பார்கவ முனி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் புத்திர பாக்யம் வேண்டி யாகம் இயற்றி, அவர் மனைவியும் கருவுற்றார். 12 மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு, முழுமையற்ற நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் இருந்ததால், அதை ஒரு மூங்கில் புதரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பின்பு, அன்னை மகாலெட்சுமி, அய்யன் விஷ்ணுவுடன் வந்து அக்குழந்தையை எடுத்து ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர்.
அவர்களின் அருளால் அக்குழந்தை ஞானமும், முழு வடிவமும் பெற்றது. அவரது வலது கால் கட்டை விரலில் கூடுதலான ஒரு கண்ணும் இருக்கும். அவ்வழியே வந்த ஹரிஜன இனத்தைச் சேர்ந்த திருவாளன் என்பவர், ஸ்ரீமன் நாராயணின்
பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமான அக்குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அக்குழந்தையைக் கண்டவுடன் அவரது மனைவியார் பங்கயச்செல்வி மிகவும் மகிழ்ந்து, தங்களின் குழந்தையற்ற குறையை நீக்கவே இக்குழந்தை வந்தது என்று எண்ணி அக்குழந்தையை வளர்க்க முடிவு செய்தனர். அவர் துணைவியார், அக்குழந்தைக்கு பாலமுது கொடுக்க
முயன்ற போது குழந்தை, உணவு உண்ண மறுத்து விட்டது. பல நாள்கள் உணவு உ ண்ணாமல் இருந்தும் அதன் உடல்நிலை எவ்வித மாறுதலும் இன்றி, நன்றாகவே இருந்தது. இச்சம்பவம், ஊர் முழுவதும் பரவி, பலர் அக்குழந்தையைக் காண வந்து சென்றனர்.

ஒரு நாள், குழந்தை பாக்கியமற்ற, வயது முதிர்ந்த தம்பதியர் வந்து அக்குழந்தையைக் கண்டனர். அவர்கள் குழந்தைக்கு, பாலமுது கொடுத்த போது அக்குழந்தை அதை ஏற்றுக் கொண்டது. ஒருநாள், முதியவர் ஒருவரும் வந்து அக்குழந்தையைக் கண்டார். அக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஞான ஒளியைக் கண்ட அவர், இது எம்பிரான் அருள் பெற்ற, தெய்வக்குழந்தை
என்று குறிப்பிட்டு, அக்குழந்தை மிச்சம் வைக்கும் பாலை, அந்த வயது முதிர்ந்த தம்பதிகள் உண்டால் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் கூறினார். அதைப் போலவே, அவர்களும் செய்து, ஒரு ஆண்மகவை ஈன்றனர். அக்குழந்தைக்கு கனி கண்ணன் என்று பெயர் சூட்டினர்.

கனி கண்ணன், வேதங்கள், சமய நூல்கள் அனைத்தும் நன்கு கற்றான். அவன் திருமழிசை ஆழ்வாரின் நெருங்கிய நண்பனாகவும், நாளடைவில் அவரையே குருவாகவும் ஏற்றுக்கொண்டான்.

பேயாழ்வார், திருமழிசையாழ்வாருக்கு, பக்தி சாரர் என்னும் திருப்பெயரிட்டு அழைத்தார்.அதன்பின், திருமழிசையாழ்வார் பல திருத்தலங்களுக்குச் சென்று ஆனந்தக்கண்ணனைக் கண்ணார தரிசித்து, திருவேக்கா என்னும் ஊரை வந்து அடைந்தார்.யதோத்தகாரி சன்னதியில் தியான நிலையில் இருந்தார்.
அங்கு, அவருக்குப் பொறுப்பாக அனைத்துப் பணிவிடைகளும் செய்த ஒரு மூதாட்டியின் அன்பிற்கு மெச்சி, அவருக்கு ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். அதைக்கேட்ட அம்மூதாட்டி, தனக்கு இந்த வயோதிகத் தோற்றம் பிடிக்கவில்லை என்றும், தான் என்றும் இளமை மாறாத அழகிய இளம்பெண்ணாக இருக்க வரம் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். அவர் வேண்டுதலைக் கேட்ட ஆழ்வாரும் அவ்வாறே அருளினார். ஒருநாள் நகர்வலம் வந்த பல்லவ மன்னன், அவ்விளம் பெண்ணைக் கண்டு, அவள் அழகில் மயங்கி, அவளையே மணந்தான்.
ஆண்டுகள் பல கழிந்தன. மன்னனுக்கு மூப்பு நிலை வரத்துவங்கியது. ஆனாலும், அவன் மனைவி, அதே இளமை மாறா அழகுடன் இருந்தாள். இதைக்கண்டு அதிசயித்த பல்லவ மன்னன், அவளின் இளமையின் இரகசியத்தைக் கேட்டான். அவளும், திருமழிசையாழ்வாரின் பெருமையை எடுத்துக் கூறினாள்.

மறுநாள், மன்னன் தன் சேவகர்களை அனுப்பி திருமழிசையாழ்வாரை அழைத்து வரச்சொன்னார். அவர் வர மறுத்து விட்டார். மீண்டும், ஆட்களை அனுப்பினார். கனிகண்ணன், அங்கு சென்றார்.மன்னன், கனி கண்ணனிடம், 'என்னைப் புகழ்ந்து உன் குரு பாட வேண்டும்', என்று கூறினார்.ஆனால், கனி கண்ணனோ, 'எம் குருநாதர் எம்பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் பாட மாட்டார்', என்று கூறினார்.சரி போனால் போகட்டும் விடு நீயாவது என்னைப் பற்றி பாடு என்று மன்னன் கனிகண்ணனிடம் ஆணையிட்டார்.
ஆனால் கனிகண்ணனோ பாட மறுத்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், அவரை அந்த ஊரில் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.
கனிகண்ணன் விரைந்து திருமழிசையாழ்வாரிடம் வந்து, அரண்மனையில் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, தான் திருவேக்காவை விட்டுப் புறப்படுவதாகவும். அதற்காகத் தன்னை மன்னித்து ஆசி அருள வேண்டும் என்று வேண்டினார், கனிகண்ணனார். திருமழிசையாழ்வார் தானும் உடன் வருவதாக கனி கண்ணனிடம் கூறி, உடன் புறப்பட்டார். புறப்படும் வேளையில், காஞ்சியில் வீற்றிருந்த எம்பெருமானை உடன் வருமாறு ஆணையிட்டார், ஆழ்வார்

"கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"

என்று பாடினார் திருமழிசையாழ்வார்.

அவர் சொன்னவுடன், எம் பெருமானும் அவர்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார். கமலக்கண்ணன் ஊரை விட்டுச் சென்றதால், காஞ்சி மாநகரம் தன் பொலிவை எல்லாம் இழந்து, ஒரே நாளில் நலிவுற்றுவிட்டது. மறுநாள் காலை, பணியாளன் ஒருவன் விரைந்து வந்து மன்னனிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். அனைத்தையும் அறிந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்து அவர்களைத் தேடிச் சென்று, அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர்களை மீண்டும் காஞ்சிக்கு வர வேண்டினான்.
அவர்களும், மன்னன் கூற்றுக்கு இசைந்து, காஞ்சிபுரம் செல்ல முடிவு செய்தனர். இப்பொழுது,

"கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"

என்று ஆழ்வார் கூற, மீண்டும் ஸ்ரீநிவாசன், காஞ்சியில் வாசம் செய்யத் துவங்கினான்.
நம்ம கனிகண்ணன், கமலக்கண்ணன், திருமழிசையாழ்வார் மூணு பேரும் ஓர் இரவு ஒரு இடத்துல தங்கியிருந்த இடம்தான் 'ஓர் இரவு இருக்கை' அப்படின்னு அழைக்கப்படுகிறது. அந்தப் பெயர் மருவி தற்காலத்தில், 'ஓரிக்கை' ன்னு சொல்றாங்க.
அதன் பிறகு, சிறிது காலம் கழித்து திருமழிசையாழ்வாரும், கனிகண்ணனும் திருக்குடந்தை நோக்கிப் பயணித்தனர். அங்கே காவிரியாற்றில் அவர் பாடிய பாடல்களை இட்ட போது அனைத்தையும் காவிரித்தாய் எடுத்துக் கொண்டு திருச்சந்த விருத்தம் (120 பாசுரம்) மற்றும் நாண்முகன் திருவந்தாதி (90 பாசுரம்) ஆகிய இரண்டை மட்டும், திருமழிசையாழ்வாரின் பொற்பாதத்தில்
சேர்ப்பித்தாள். அவர் அவற்றை எடுத்துக் கொண்டு ஆரவமுதப் பெருமாளிடத்தில் வந்து சேர்ந்தார். பின், திருக்குடந்தையிலேயே தங்கி எம்பெருமான் பெயரில் மங்களசாசனம் பாடினார்.

திருச்சந்த விருத்தத்தில் அவர் கூறுவது:

நின்றது எந்தை ஊரகத்துஇருந்தது எந்தை பாடகத்து
அன்று வாக்கனைக் கிடந்துஎண்ணிலாத முன்னெல்லாம்
அன்று நான் பிறந்திலேன்;பிறந்த பின் மற்ந்திலேன்
நின்றதும் இருந்ததும்கிடந்ததும் என்னெஞ்சினுள்ளே!

நீ வெவ்வேறு ஊர்களில், நின்று, இருந்து, கிடந்து என்னும் வெவ்வேறு கோலங்களில், கணக்கில்லாத யுகங்களாய் அருள்

புரிந்துக் கொண்டிருக்கின்றாய்! அப்பொழுதெல்லாம், நான் பிறக்கவேயில்லை. நான் பிறந்த பின்பு உன்னை ஒருகாலத்திலும் மறந்ததேயில்லை. நான் இருக்கின்ற இக்காலத்தில், நீ நின்றது, இருந்தது, கிடந்தது எல்லாம் என் இதயத்தாமரைக்குள்ளேயன்றி வேறெங்குமில்லை! என்று பாடி பரவசமடைகிறார், திருமழிசையாழ்வார்.

திருகச்சநம்பிகள் திருமழிசையாழ்வார் பற்றி இயற்றிய தனியன்கள்.

தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும் ,
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே.

உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து * தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க,-உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் ,* மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.

திருமழிசையாழ்வார் திருவரங்கனைப் பற்றி பாடிய பாடல்கள் இவை.

1. அரங்கனே! தரங்கநீர்* கலங்க அன்று குன்று சூழ் *
மரங்கள் தேய மாநிலம் குலுங்க* மாசுணம் சுலாய் *
நெருங்கநீ கடைந்தபோது,* நின்ற சூரர் என்செய்தார்?*
குரங்கை ஆளுகந்த எந்தை !* கூறுதேற வேறிதே.* 21.

2.கொண்டை கொண்ட கோதைமீது* தேனுலாவு கூனிகூன்*
உண்டை கொண்ட அரங்கவோட்டி * உள் மகிழ்ந்த நாதனூர்
நண்டையுண்டு நாரை பேர* வாளை பேய நீலமே,*
அணடை கொண்டு கெண்டைமேயும்* அநதணீர் அரங்கமே. 49

3.வெண்திரைக் கருங்கடல்* சிவந்து வேவ முன்னோர்நாள்*
திண்திறல் சிலக்கை வாளிவிட்டவீரர் சேருமுர்*
எண் திசைக் கணங்களும்* இறைஞ்சி ஆடு தீரத்த நீர்,*
வண்டு இரைத்த சோலை வேலி* மன்னுசீர் அரங்கமே . 50

4.சரங்களைத் துரந்த* வில் வளைத்து இலங்கை மன்னவன்,*
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த* செல்வர் மன்னு பொன்னிடம் ,*
பரந்து பொன்நிறந்து நுந்தி* வந்து அலைக்கும் வார்புனல்,*
அரங்கமெனபர் நான்முகத்து *அயன்பணிந்த கோயிலே. 51

5.பொற்றை உற்ற முற்றல் யானை* போர் எதிர்த்து வந்ததை*
பற்றி உற்று மற்றதன்* மருப்பொசித்த பாகனூர்,*
சிற்று எயிற்றுமுற்றல்மூங்கில்* மூன்று தண்டர் ஒன்றினர் ,*
அற்ற பற்றர் சுற்றி வாழும்* அந்தணீர் அரங்கமே. 52

6.மோடியோடு இலச்சையாய* சாபம் எய்தி முககணான் ,*
கூடு சேனை மக்களோடு* கொண்டு மண்டி வெஞ்சமத்து -
ஓட* வாணண் ஆயிரம்* கரங்கழித்த ஆதிமால் ,*
பீடுகோயில் கூடுநீர்* அரங்கமென்ற பேர் அதே. 53

7.இலைத் தலை சரந்துரந்து* இலங்கை கட்டழித்தவன் ,*
மலைத் தலைப் பிறந்து இழிந்து* வந்து நுந்து சந்தனம்,*
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த* குங்குமக் குழம்பினோடு,*
அலைத்தொழுகு காவிரி* அரங்கமேய அண்ணலே. 54

8.மன்னு மாமலர் கிழத்தி* வைய மங்கை மைந்தனாய்,*
பின்னும் ஆயர் பின்னைதோள்* மணம் புணர்ந்தது அன்றியும்,
உன்ன பாதம் என்ன சிந்தை* மன்ன வைத்து நல்கினாய்,*
பொன்னி சூழ் அரங்கமேய* புண்டரீகன் அல்லையே? 55

9.சுரும்பு அரங்கு தண்துழாய்* துதைந்து அலர்ந்த பாதமே,*
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு* இரங்கு அரங்க வாணனே,*
கரும்பிருந்த கட்டியே* கடல்கிடந்த கண்ணனே,*
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த* வில்லி இராமனே! 93

10.பொன்னிசூழ் அரங்கமேய * பூவைவண்ண! மாய! கேள்,*
என்னதாவி என்னும்* வல் வினையின் உள் கொழுந்து எழுந்து,*
உள்ளபாதம் என்ன நின்ற* ஒண்சுடர்க் கொழுமலர் ,*
மன்ன வந்து பூண்டு* வாட்டமின்றி எங்கும் நின்றதே. 119


வியாழன், 30 டிசம்பர், 2010






பொய்கையாழ்வார்



பொய்கையாழ்வார் அருளிச் செய்தது

அவரைப்பற்றிய தனியன் முதலியாண்டான் அருளியது

கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கைபிரான் கவிஞர்போரேறு - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழ் அந்தாதி
படிவிளங்தச் செய்தான் பரிந்து.

முதல் திருவந்தாதி

1.
ஒன்றும் மறந்தறியேன்* ஓதநீர்வண்ணனைநான்*
இன்றுமறப்பனோ ஏழைகாள்* -அன்று
கருவரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கணடேன்*
திருவரங்கமேயான் திசை (1) 2087









பூதத்தாழ்வார் .


பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

அவரைப்பற்றிய தனியன் திருக்குரிகைபிரான் பிள்ளான் அருளியது

என்பிறவி தீர இரைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி அளித்தானை -நன்புகழ் சேர் -
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்

பூதத்தாழ்வார்

மகாபலிபுரம் திருத்தலத்தில் எம்பெருமான் நாராயணன் (கிடந்த வண்ணம்) சயனக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
பூதத்தாழ்வார் பெருமாளின் 5 ஆயுதங்களின் ஒன்றான கதையின்(கௌமோதகி) அம்சமாவார். இவருக்கான மலர் -

குறுக்கத்தி(நீலோற்பல மலர்) ஆகும்.

எம்பெருமான் பஞ்ச பூதங்களாக இருக்கிறார் என்று நம்பி, பூதத்தாழ்வார் அந்த நம்பியின் அம்சங்களனைத்தையும் கொண்ட பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டார்.

பஞ்ச பூதங்களாக இருக்கும் எம்பிரானைப் பற்றி பாடும் ஆழ்வார், அதனால் பூதம் + ஆழ்வார் = பூதத்தாழ்வார்.

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் அரங்கனைப் பற்றி 4 பாசுரங்களைப் பாடியுள்ளார்
2. மனத்துள்ளான் வேங்கடத்தான்* மாகடலான்* மற்றும்-
நினைப்பிரய* நீள் அரங்கத்துள்ளான்*- எனைப்பலரும்
தேவாதிதேவன்* எனப்படுவான்* முன்னொருநாள் -
மாவாய் பிளந்த மகன் (2) 2209
3.பயின்றது அரங்கம் திருக்கோட்டி*பன்னாள் -
பயின்றதுவும்* வேங்கடமே பன்னாள்,*-பயின்றது -
அணிதிகழும் சோலை* அணிநீர் மலையே *
மணிதிகழும் வண்தடக்கை மால் (3) 2227
4.தமருள்ளம் தஞ்சை *தலையரங்கம் தண்கால் *
தமருள்ளம் தண்பொருப்பு வேலை *தமருள்ளம் -
மாமல்லை கோவல் *மதிட்குடந்தை என்பரே,*
ஏவல்ல எந்தைக் கிட. 2251
5.திறம்பிற்று இனியறிந்தேன் *தென்னரங்கத்து எந்தை *
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் ,*-திறம்பாச்-
செடிநரகை நீக்கி *தான் செல்வதன் முன் ,*வானோர் -
கடிநிகர வாசல் கதவு. 2269

சனி, 30 அக்டோபர், 2010

ஆழ்வார்கள் அருளிய திருவரங்கப் பாசுரங்கள்

யச்யாபவத் பக்த ஜனார்த்திஹந்து :
பித்ருத்வ ,மந்யஷ்வ விசார்யதூர்ணம் :
ஸ்தம்பே வதாரஸ் தமநந்ய லப்யம் :
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே :

கேசவார்ய க்ருபா பாத்ரம் தீஸமாதி குணார்ணவம்
ஸ்ரீசடாரி யதீஸானாம் தேசிகேந்த்த்ரமஹம் பஜே
ஸ்ரீரங்கநாத ஸடகோப யதீந்த்ரத்ருஷ்டம்
லகஷ்ந்ருஸிம்ஹ ஸடஜித் தருணைகபாத்ரம்
வேதாந்த தேஸிக யதீந்த்ரமஹம் ப்ரபத்யே

ஸ்ரீமதே ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்த
தேசிக யதீந்திர மஹாதேசிகாய நம:
ஸ்ரீமத் ரங்கசடாரி ஸம்யமிவராத்
லப்தாக மந்தாத்வ்யம்
ஸ்ரீமத் வீரரகூத்வஹாத்ய ஸடசித்
பாதரவிந்தாஸ்ரயம்
ஸ்ரீநாராயண யதீந்தத்ர
மஹாதேஸ்ரீகாய நம
வேதாந்த தேஸ்ரீக யதீந்த்ர கடாக்ஷலப்த
த்ரைய்யந்த ஸாரமவைத்ய குணம் புதாக்ரயம்
நாராயணாத்ய யதீதுர்ய க்ருபாபீகக்ஷீதம்
ஸ்ரீரங்கநாத யதீஸேகரம் ஆஸ்ரயாம
ஸ்ரீமதே ஸ்ரீவண் ஸடகோப ஸ்ரீரங்கநாத
யதீந்த்ர மஹாததேஸ்ரீகாயய நம
ராமானுஜதயா பாத்ரம் ஞானவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேசிகம்

லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

யோநித்யமச்யுத பதாம் புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாயமேனே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ
ராமானுஜஸ்ய ஸரணௌ ஸரணம் பரபத்யே
C
மாதாபிதா யுவதயஸ் தநயாவிபூதிஸ்
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந:குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணணமாமி மூர்த்நா

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீபக்திஸார குலசேகர யோகி வாஹாந்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்


அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

பொய்கையாழ்வார் அருளிச் செய்தது

அவரைப்பற்றிய தனியன் முதலியாண்டான் அருளியது

கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கைபிரான் கவிஞர்போரேறு - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழ் அந்தாதி
படிவிளங்தச் செய்தான் பரிந்து.

தொண்டை நாட்டில், காஞ்சிபுரம் என்னும் திருமாநகரில் உள்ள திருவேக்கா என்னும் ஊரில் வீற்றிருக்கும் யதோத்தகிரி திருக்கோயிலின் தாமரைக் குளத்தில் தான் பொய்கையாழ்வார் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த நட்சத்திரக் குறிப்புகள் அனைத்தும் அவர் கண்டெடுக்கப்பட்ட நேரத்தைக் கொண்டு கணித்ததே. அக்குளத்தின் திருப்பெயர் பொய்கை எனப்படுவதால் இவர் பொய்கையாழ்வார் என்னும் திருப்பெயரிட்டு அழைக்கப்பெற்றார். இவர் எம்பெருமான் நாராயணின் பஞ்சாயுதங்களில் ஒன்றான திருசங்கின் அம்சமாவார்.

வியாழன், 22 ஏப்ரல், 2010


அருள்மிகு அரங்கநாதர் மற்றும் அருள்மிகு அரங்கநாயகி சமேதராக காட்சி அளிப்பது
பங்குனி உத்திரம் அன்று