வியாழன், 30 டிசம்பர், 2010






பொய்கையாழ்வார்



பொய்கையாழ்வார் அருளிச் செய்தது

அவரைப்பற்றிய தனியன் முதலியாண்டான் அருளியது

கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கைபிரான் கவிஞர்போரேறு - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழ் அந்தாதி
படிவிளங்தச் செய்தான் பரிந்து.

முதல் திருவந்தாதி

1.
ஒன்றும் மறந்தறியேன்* ஓதநீர்வண்ணனைநான்*
இன்றுமறப்பனோ ஏழைகாள்* -அன்று
கருவரங்கத்துள் கிடந்து* கைதொழுதேன் கணடேன்*
திருவரங்கமேயான் திசை (1) 2087









பூதத்தாழ்வார் .


பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

அவரைப்பற்றிய தனியன் திருக்குரிகைபிரான் பிள்ளான் அருளியது

என்பிறவி தீர இரைஞ்சினேன் இன்னமுதா
அன்பே தகளி அளித்தானை -நன்புகழ் சேர் -
சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல்மல்லைப்
பூதத்தார் பொன்னங்கழல்

பூதத்தாழ்வார்

மகாபலிபுரம் திருத்தலத்தில் எம்பெருமான் நாராயணன் (கிடந்த வண்ணம்) சயனக்கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
பூதத்தாழ்வார் பெருமாளின் 5 ஆயுதங்களின் ஒன்றான கதையின்(கௌமோதகி) அம்சமாவார். இவருக்கான மலர் -

குறுக்கத்தி(நீலோற்பல மலர்) ஆகும்.

எம்பெருமான் பஞ்ச பூதங்களாக இருக்கிறார் என்று நம்பி, பூதத்தாழ்வார் அந்த நம்பியின் அம்சங்களனைத்தையும் கொண்ட பெயரையே தனக்கும் வைத்துக் கொண்டார்.

பஞ்ச பூதங்களாக இருக்கும் எம்பிரானைப் பற்றி பாடும் ஆழ்வார், அதனால் பூதம் + ஆழ்வார் = பூதத்தாழ்வார்.

பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் அரங்கனைப் பற்றி 4 பாசுரங்களைப் பாடியுள்ளார்
2. மனத்துள்ளான் வேங்கடத்தான்* மாகடலான்* மற்றும்-
நினைப்பிரய* நீள் அரங்கத்துள்ளான்*- எனைப்பலரும்
தேவாதிதேவன்* எனப்படுவான்* முன்னொருநாள் -
மாவாய் பிளந்த மகன் (2) 2209
3.பயின்றது அரங்கம் திருக்கோட்டி*பன்னாள் -
பயின்றதுவும்* வேங்கடமே பன்னாள்,*-பயின்றது -
அணிதிகழும் சோலை* அணிநீர் மலையே *
மணிதிகழும் வண்தடக்கை மால் (3) 2227
4.தமருள்ளம் தஞ்சை *தலையரங்கம் தண்கால் *
தமருள்ளம் தண்பொருப்பு வேலை *தமருள்ளம் -
மாமல்லை கோவல் *மதிட்குடந்தை என்பரே,*
ஏவல்ல எந்தைக் கிட. 2251
5.திறம்பிற்று இனியறிந்தேன் *தென்னரங்கத்து எந்தை *
திறம்பா வழி சென்றார்க்கு அல்லால் ,*-திறம்பாச்-
செடிநரகை நீக்கி *தான் செல்வதன் முன் ,*வானோர் -
கடிநிகர வாசல் கதவு. 2269

சனி, 30 அக்டோபர், 2010

ஆழ்வார்கள் அருளிய திருவரங்கப் பாசுரங்கள்

யச்யாபவத் பக்த ஜனார்த்திஹந்து :
பித்ருத்வ ,மந்யஷ்வ விசார்யதூர்ணம் :
ஸ்தம்பே வதாரஸ் தமநந்ய லப்யம் :
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே :

கேசவார்ய க்ருபா பாத்ரம் தீஸமாதி குணார்ணவம்
ஸ்ரீசடாரி யதீஸானாம் தேசிகேந்த்த்ரமஹம் பஜே
ஸ்ரீரங்கநாத ஸடகோப யதீந்த்ரத்ருஷ்டம்
லகஷ்ந்ருஸிம்ஹ ஸடஜித் தருணைகபாத்ரம்
வேதாந்த தேஸிக யதீந்த்ரமஹம் ப்ரபத்யே

ஸ்ரீமதே ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்த
தேசிக யதீந்திர மஹாதேசிகாய நம:
ஸ்ரீமத் ரங்கசடாரி ஸம்யமிவராத்
லப்தாக மந்தாத்வ்யம்
ஸ்ரீமத் வீரரகூத்வஹாத்ய ஸடசித்
பாதரவிந்தாஸ்ரயம்
ஸ்ரீநாராயண யதீந்தத்ர
மஹாதேஸ்ரீகாய நம
வேதாந்த தேஸ்ரீக யதீந்த்ர கடாக்ஷலப்த
த்ரைய்யந்த ஸாரமவைத்ய குணம் புதாக்ரயம்
நாராயணாத்ய யதீதுர்ய க்ருபாபீகக்ஷீதம்
ஸ்ரீரங்கநாத யதீஸேகரம் ஆஸ்ரயாம
ஸ்ரீமதே ஸ்ரீவண் ஸடகோப ஸ்ரீரங்கநாத
யதீந்த்ர மஹாததேஸ்ரீகாயய நம
ராமானுஜதயா பாத்ரம் ஞானவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேசிகம்

லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

யோநித்யமச்யுத பதாம் புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாயமேனே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ
ராமானுஜஸ்ய ஸரணௌ ஸரணம் பரபத்யே
C
மாதாபிதா யுவதயஸ் தநயாவிபூதிஸ்
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந:குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணணமாமி மூர்த்நா

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீபக்திஸார குலசேகர யோகி வாஹாந்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்


அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

பொய்கையாழ்வார் அருளிச் செய்தது

அவரைப்பற்றிய தனியன் முதலியாண்டான் அருளியது

கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கைபிரான் கவிஞர்போரேறு - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழ் அந்தாதி
படிவிளங்தச் செய்தான் பரிந்து.

தொண்டை நாட்டில், காஞ்சிபுரம் என்னும் திருமாநகரில் உள்ள திருவேக்கா என்னும் ஊரில் வீற்றிருக்கும் யதோத்தகிரி திருக்கோயிலின் தாமரைக் குளத்தில் தான் பொய்கையாழ்வார் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த நட்சத்திரக் குறிப்புகள் அனைத்தும் அவர் கண்டெடுக்கப்பட்ட நேரத்தைக் கொண்டு கணித்ததே. அக்குளத்தின் திருப்பெயர் பொய்கை எனப்படுவதால் இவர் பொய்கையாழ்வார் என்னும் திருப்பெயரிட்டு அழைக்கப்பெற்றார். இவர் எம்பெருமான் நாராயணின் பஞ்சாயுதங்களில் ஒன்றான திருசங்கின் அம்சமாவார்.

வியாழன், 22 ஏப்ரல், 2010


அருள்மிகு அரங்கநாதர் மற்றும் அருள்மிகு அரங்கநாயகி சமேதராக காட்சி அளிப்பது
பங்குனி உத்திரம் அன்று

புதன், 14 ஏப்ரல், 2010

இது மற்றொரு கோணத்தில் இருந்து எடுக்கப் பட்ட ராஜா கோபுரத்தின் அமைப்பு ஆகும்
அரங்கனின் அடிமையில் இன்று புதிதாக ராஜ கோபுரத்தினை இணைத்துள்ளேன் இதனைப் பற்றிய விபரங்களை