சனி, 14 மே, 2011








குலசேகரஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சிக்களம் கேரளா.


குலசேகரஆழ்வார்










குலசேகர ஆழ்வார்
ஆரம் கெடப்பர
ன் அன்பர் கொள்ளார்* என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில் கையிட்டவன்* மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன்* வில்லவர்கோன்
சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகாமணியெ.

மேலே குறிப்பிட்ட பாடல் எதைப் பற்றித் தெரியுதா?

அது குலசேகர ஆழ்வார் பற்றிய சரித்திரம் தெரிந்தால் உஙகளுக்குப் புரிந்துவிடும்.
அது என்னய்யா சரித்திரம் என்கிறீர்களா?
குலசேகரர் சேரநாட்டை ஆண்டு வந்தார்.அவர் வீரமும் விவேகமும் உடைய அரசராக சிறப்பாக ஆண்டு வந்தார். கடவுள் பக்தி உடையவர்.
ரங்கனாதரி
டம் தீவிர பக்தி கொன்டவன்.இவருடைய பக்தி ம்ற்றும் ஆற்றலைக் கன்டு பான்டிய ராஜா தன் பெண்ணை இவருக்கு மணம் முடித்தான். இவருக்கும் ஒர் ஆண் மகவு பிறந்த‌து.மகனுக்கு திடவிரதன் என்று பெயர் சூட்டினான்.
நாளாக நாளாக,போரில் பல உயிர்கள் மடிவது குலசேகருக்கு வேதனையைக் கொடுத்தது.
ராமனைப் பற்றி உபன்யாசஙகள் கேட்பதில் ஆர்வம் கொன்டவனாக
இருந்தான்.அந்த சமயத்தில் உபன்யாசகர், ராமன் அசுரர்களை அழிக்க இலக்குமணனை சீதா பிராட்டிக்கு காவல் வைத்து விட்டு சென்றதை விவரித்துக் கொன்டிருந்தார். இதைக் கேட்ட,குலசேகரர உடனே தன் சேன்யங்களை ராமனுக்கு உதவச் செல்லும்படி ஆனைஇட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.உபன்யாசகர் ராமர் தனியாகவே அசுரரகளை வென்று விட்டார்,மற்றும் இது நடந்த்து திரேதாயுகத்தில்,இப்போது அல்ல என்று சொல்ல பின்பு தான் அமைதியானார் என்றால் பார்த்துக்கொள்ளுஙகள்.
இவர் அனுதினமும் பூஜை செய்வதற்காக ஒரு ராமர் விக்கிரஹத்தை சிலை
வடிவ
த்தில் செய்து பூஜித்து கொன்டே இருந்தார், நாட்டின் மீது அக்கரை இல்லாமல் இருந்து வந்தார்.இதை அறிந்த அமைச்சர்கள்,இப்படியே போனால் நாட்டின் நிலைமை மோசமாகிவிடும் என்று நினைத்து, ராமர் விக்கிரஹ்த்தின் மேல் இருந்த ஒரு நவரத்தின மாலையை எடுத்து ஒளித்து வைத்து விட்டு,அந்தப் பழியை விஷ்னு பக்தர்கள் மேல் போட்டு விட்டனர் என்றால் பாருங்கள்.
இதை அறிந்த குலசேகரர், புழுவாகத் துடித்தார்."விஷ்ணு பக்தர்கள் ஒரு நாளும் அப்படிச் செய்து இருக்கமாட்டார்கள். அவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப் பட மாட்டார்கள்" என்று திடமாக நம்பினார்.
இதனை மெய்ப்பிக்க உடனே மெய்க்காவலர்களைக் கூப்பிட்டு ஒரு குடத்தை எடுத்து வரச் சொன்னார். அதில் ஒரு பாம்பை போட்டார்."விஷ்ணு பக்தர்கள் மாலையை எடுத்து இருந்தார்கள் எனில் இந்தப் பாம்பு என் கைகளைக்
கடிக்கட்டும" என்று கைகளை குடத்துக்குள் விட்டார். என்ன அதிசியம் பாருங்கள்
பாம்பு அவரை ஒன்றும் செய்யவிலை.
இதனைக் கணட‌அமைச்சர்கள் மறைத்து வைத்திருந்த மாலையை திருப்பிக் கொடுத்து தாங்கள் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டனர் என்றால் பாருங்
கள்.
இதனைத் தான் "வாரம் கொடுகுடப் பாம்பில் கையிட்டவன்" என்று தனியனாக முன்னர் பார்த்தோம்.
இப்போது புரிந்ததா, குலசேகரனின் விஷ்ணு பக்தி?
இதனால் மனம் நொந்த குலசேகரர் அரசாட்சியை தன்னுடைய புதல்வனிடம் அளித்து விட்டு,இராமபிரானின் பல்வேறு புனிதத் தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டார்.
இராம பிரானைப் போலவே அரங்கனாதனிடமும் பக்தி கொண்டிருந்தார்.பெருமாளிடம் அதிக பக்தி கொனண்டிருந்ததாலோ என்னவோ,
இவர் "குலசேகரப் பெருமாள்"
என்று அழைக்கப்பட்டார்.
குலசேரகப்பெருமாள், பெருமாள் மீது பக்தி சொட்ட சொட்ட பாடல்கள் பாடியுள்ளார்.அவை "பெருமாள் திருமொழி" என்று அழைக்கப்படுகிறது.
105 பாசுர‌ங்கள் கொண்டதாகும் அது.
இதில் அரங்கனாதனைப் பற்றி முதல் திருவந்தாதியில் பதினோரு பாசுரங்கள் பக்தி சொட்ட சொட்ட பாடியுள்ளார் என்றால் பாருங்கள்.
மேலும் கண்ணபிரானைப் பற்றி வடமொழியில் " முகுந்த மாலை" என்ற பக்தி ரசம் சொட்டும் பாசுரங்களையும் பாடியுள்ளார். இதில் என்ன முக்கியமானது என்றால் வடமொழியில் பாசுரங்களை இயற்றிய ஒரே ஆழ்வார் "குலசேகர ஆழ்வார்" மட்டுமே.
குலசே
கர ஆழ்வாரை பெருமாள் அணியும் கெளசத்துபம் என்ற மாலையின் அம்சமாகக் கருதுவார்கள்.
குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்வசு நகஷ்த்திர்த்தில் திருவஞ்சிக்களம் என்ற‌
ஊரில் (கேரளாவில் திருச்சூருக்கு அருகாமையில் உள்ளது) பிறந்தார்.






அரங்கநாதர் கருடசேவைக் காட்சி







பெருமாள் திருமொழி தனியன்கள்.

உடையவர் அருளிச் செய்தது

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே*
தென்னரங்கம் பாடவல்ல சீர்பெருமான்‍பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன்* எங்கள
குலசேகரன் என்றெ கூறு.

ஆரம் கெடப்பரன் அன்பர் கொள்ளாரென்று* அவரகளுக்கே
வாரங் கொடு குடப் பாம்பில் கையிட்டவன்* மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன்* வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே.

குலசேகரர் பெருமாள் திருமொழி.

1.இருளிரியச் சுடர்ம‌ணிகள் இமைக்கும் நெற்றி*
இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த*
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்னும்*
அணிவிளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி*
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*
திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்*
கருமணியைக் கோமளத்தை கண்டு கொண்டு* என்
கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே.

2. வாயோர் ஈர் ஐ நூறு நுதங்கள் ஆர்த்த*
வளையுடம்பின் அழல்நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்சென்னி விதானமே போல்*
மேன்மெலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்*
காயாம்பூ மலரப் பிறங்கல் அன்ன மாலைக்*
கடியரங்கத்து அரவணையில்பள்ளி கொள்ளும்*
மாயோனை மனத்தூணெ பற்றி நின்று* என்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே?

3. எம்மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி* ஈரிரண்டு முகமும் கொண்டு*
எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்*
தொழுதேத்தி இனிதிரைஞ்ச நின்ற* செம்பொன்
அம்மான் தன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற*
அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*
அம்மான் தன் அடியிணைக்கீழ் அலர்களிட்டு*
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே?

4. மாவினைவாய் பிளந்துகந்த மாலை*வேலை
வண்ணணை என் கண்ணணை வன்குன்றமேந்தி*
ஆவினை அன்று உய்யக்கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அந்த்மிழ் இன்பப்
பாவினை* அவ்வடமொழியைப் பற்ற்ற் றார்கள்*
பயிலற‌ங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*
கோவினை நாவுற் வழுத்தி எந்தன் கைகள்*
கொய்ம் மல்ர்தூய் என்று கொலோ கூப்பும் நாளே?

5 இணையில்லாஇன்னிசை யாழ் கெழுமி* இன்புத்
தும்புரூவும் நாரதனும் இறைஜஞ்சி ஏத்த*
துணையில்லாத் தொன் மறைநூல் தோத்திரத்தால்*
தொன்மலர்க் கண் அயன் வணங்கி ஓவாதேத்த*
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ*
மதிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*
மணிவண்ணன் அம்மானை கண்டு கொண்டு* என்
மலர்சென்னி என்று கொலோ வண்ங்கும் நாளே?

6 அளிமர்மேல் அயன் அரன் இந்திரனோடு* ஏனை
அமரர்கள் குழுவும் அரம்பையரும் மற்றும்*
தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்*
திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும்*
களிமலர்சேர் கடல்வண்ணர் கமலக் கண்ணும்*
ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டு* என்
உள்ளமிக என்றுகொலோ உருகும் நாளே?

7. மறம் திகழும் மனமொழிந்து வஞ்ச மாற்றி*
ஐம்புலங்கள் அடக்கி இடர் பார‌த் துன்பம்
துறந்து* இரு முப்போழுது ஏத்தி எல்லையில்லாத்
தொன்னெறிக் கண்* நிலை நின்ற தொண்டரான*
அறம் திகழும் மனத்தவர் தம் கதியைப் பொன்னி*
அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*
நிறம் திகழும் மாயோனைக் கண்டு என் கண்கள்*
நீர்மல்க என்று கொலோ நிற்கும் நாளே.

8.கோலார்ந்த நெடுஞ் சார்ங்கம் கூனற் சங்கம்*
கொலையாழி கொடுந் தண்டு கொற்ற ஒள்வாள்*
காலார்ந்த கதிக் கருடனென்னும்* வென்றிக்
கடும்பறவை இவையனைத்தூம் புற்ஞ்சூழ் காப்ப*
சேலார்ந்த நெடுங்கழனி சோல சூழந்த*
திருவரங்க தரவனையில் பள்ளி கொள்ளும்*
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி*
வல்வினையேன் என்று கொலோ வாழும் நாளே?

9. தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமித்* திருப்புகழ்கள் பலவும் பாடி*
ஆராத மனக்களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர* நினைந்துருகி ஏத்தி* நாளும்-
சீரார்ந்த முழவோசை பரவை காட்டும்*
திருவரங்க தரவனையில் பள்ளி கொள்ளும்*
பேராழி அம்மானைக் கண்டு துள்ளிப்*இப்
பூதலத்தில் எறு கொலோ புரளும் நாளே?

10.வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய‌-
மண்ணுய்ய* மண்ணுலகில் மனிசர் உய்ய*
துன்பமிகு துயர் அகல* அயர்வு ஒன்ற்றில்லாச்
சுகம் வளர* அகமகிழும் தொண்டர் வாழ*
அன்போடு தென் திசை நோக்கி பள்ளீ கொள்ளூம்*
அணியரங்கன் திருமுற்றத்துஅடியார் தஙகள்*
இன்பமிகு பெருங்குழவு கண்டு* யானும்-
இசைந்துடனே என்று கொலோ இருக்கும் நாளே?

11 .திடர் விள்ங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டு*
திருவரங்க தரவனையில் பள்ளி கொள்ளூம்*
கடல்விளங்கு கரு மேனி அம்மான் தன்னைக்*
கண்ணாரக் கண்டு உகக்கும் காதல் த்ன்னால்*
குடைவிள‌ங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள்*
கூடலர் கோன் கொடைகுலசேகரன் சொற்செய்த*
நடைவிளங்கு நாரணண் அடிகீழ் நண்ணுவாரே.

இரண்டாம் திருமொழி.

12. தேட்டரும் திறல் தேனினைத்* தென்னரங்கனை* திருமாதுவாழ்
வாடடமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால்கொள் சிந்தையராய்*
ஆட்டமேவி யலந்தழைத்து* அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம்*
ஈட்டம் கண்டிடக் கூடுமேலது காணும் பயனாவதே.

13. தோடுலா மலர் மங்கை தோளினைத்* தோய்ந்ததும்* சுடர்வாளியால்*
நீடுமராமரம் செற்றதும்* நிரைமேத்ததும் இவையே நினைந்து*
ஆடிப்பாடி அரங்கவோ என்றழைக்கும்*தொண்டர் அடிப்பொடி ஆட‌
கங்கை நீர் குடைந்தாடும்* வேட்கை என்னாவதே.

14. ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்* முன் இராமனாய்*
மாறடர்த்ததும் மண்ணளந்ததும்* சொல்லிப் பாடி*
வண் பொன்னிப்பேராறு போல் வரும் கண்ணனீர் கொண்டு* அரங்கன்கோயில் திருமுற்றம்*
சேறு செய் தொண்டர் சேவடிச் செழும்சேறு என் சென்னிக் கணிவனே.


15. தோய்த்த தண்தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும்* உடன்று ஆய்ச்சி கண்டு*
ஆர்த்த தோளுடை எம்பிரான்* என்னரங்கனுக்கு அடியார்களாய்*
நாத்தழும்பெழ நாரணா என்றழைத்து* மெய் தழும்பத் தொழுது
ஏத்தி,*இன்புறும் தொண்டர்சேவடி* ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே.


16. பொய்சிலைக் குரல் ஏற்று எறுத்தம் இறுத்து* போரர வீர்த்தகோன்*
செய்சிலைச்சுடர் சூழொளித்*திண்ண மாமதிள் தென்னரன்ங்கனாம்*
மெய்சிலைக் கருமேகம் ஒன்று* தம் நெஞ்சில் நின்று திகழப்போய்*
மெய்சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என்மனம் மெய் சிலிர்க்குமே.


17. ஆதி அந்தம் அனந்தம் அற்புதமான* வனவர் தம்பிரான்*
பாதமாமலர் சூடும் பத்தியிலாத* பாவிகள் உயிந்திட*
தீதில் நன்னெறி காட்டி* எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
காதல் செய்தொண்டர்க்கு எப்பிறப்பிலும்* காதல் செய்யும் என் நெஞ்சமே.

18. காரினம் புரை மேனி நல் கதிரமுத்த* வெண்ணகைச் செய்யவாய்*
ஆரமார்வன் அரங்கனென்னும்* அரும் பெருஞ்சுடர் ஒன்றினை*
சேரும் நெஞ்சினராகிச்* சேர்ந்து கசிந்திழிந்த கண்ணீர்களால்*
வார நிற்பவர் தாளிணைக்கு* ஒரு வாரமாகும் என் நெஞ்சமே

19. மாலையுற்ற கடல் கிடந்தவன்* வண்டு கிண்டு ந‌றுந்துழாய்*
மாலையுற்ற வரைப் பெருந் திருமார்வனை மலர்க் கண்ணனை*
மாலையுற்று எழுந்தாடிப் பாடி* திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு* மாலையுற்றது என் நெஞ்சமே

20. மொய்த்து கண்பனி சோர மெய்கள் சிலிர்ப்ப* ஏங்கி இளைத்து நின்று*
எய்த்து கும்பிடு நட்டமிட்டெழுந்து* ஆடிப்பாடி இறைஞ்சி* என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி* அவனுக்கே
பித்தராமவர் பித்தர் அல்லர்கள்* மற்றையார் முற்றும் பித்தரே.

21. அல்லிமாமலர் மங்கைநாதன்* அரங்கன் மெய்யடியார்கள் தம்*
எல்லையில் அடிமைத் திறத்தினில்* என்றும் மேவு மனத்தனாம்*
கொல்லிகாவலன் கூடல்நாயகன்* கோழிக்கோன் குலசேகரன்*
சொல்லின் இந்தமிழ் மாலை வல்லவர்* தொண்டர் தொண்ட்ர்கள் ஆவரே.