சனி, 30 அக்டோபர், 2010

ஆழ்வார்கள் அருளிய திருவரங்கப் பாசுரங்கள்

யச்யாபவத் பக்த ஜனார்த்திஹந்து :
பித்ருத்வ ,மந்யஷ்வ விசார்யதூர்ணம் :
ஸ்தம்பே வதாரஸ் தமநந்ய லப்யம் :
லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே :

கேசவார்ய க்ருபா பாத்ரம் தீஸமாதி குணார்ணவம்
ஸ்ரீசடாரி யதீஸானாம் தேசிகேந்த்த்ரமஹம் பஜே
ஸ்ரீரங்கநாத ஸடகோப யதீந்த்ரத்ருஷ்டம்
லகஷ்ந்ருஸிம்ஹ ஸடஜித் தருணைகபாத்ரம்
வேதாந்த தேஸிக யதீந்த்ரமஹம் ப்ரபத்யே

ஸ்ரீமதே ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்த
தேசிக யதீந்திர மஹாதேசிகாய நம:
ஸ்ரீமத் ரங்கசடாரி ஸம்யமிவராத்
லப்தாக மந்தாத்வ்யம்
ஸ்ரீமத் வீரரகூத்வஹாத்ய ஸடசித்
பாதரவிந்தாஸ்ரயம்
ஸ்ரீநாராயண யதீந்தத்ர
மஹாதேஸ்ரீகாய நம
வேதாந்த தேஸ்ரீக யதீந்த்ர கடாக்ஷலப்த
த்ரைய்யந்த ஸாரமவைத்ய குணம் புதாக்ரயம்
நாராயணாத்ய யதீதுர்ய க்ருபாபீகக்ஷீதம்
ஸ்ரீரங்கநாத யதீஸேகரம் ஆஸ்ரயாம
ஸ்ரீமதே ஸ்ரீவண் ஸடகோப ஸ்ரீரங்கநாத
யதீந்த்ர மஹாததேஸ்ரீகாயய நம
ராமானுஜதயா பாத்ரம் ஞானவைராக்ய பூஷணம்
ஸ்ரீமத்வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்ததேசிகம்

லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

யோநித்யமச்யுத பதாம் புஜயுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாயமேனே
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைகஸிந்தோ
ராமானுஜஸ்ய ஸரணௌ ஸரணம் பரபத்யே
C
மாதாபிதா யுவதயஸ் தநயாவிபூதிஸ்
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந:குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணணமாமி மூர்த்நா

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீபக்திஸார குலசேகர யோகி வாஹாந்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்த்ர மிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்


அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

பொய்கையாழ்வார் அருளிச் செய்தது

அவரைப்பற்றிய தனியன் முதலியாண்டான் அருளியது

கைதைசேர் பூம்பொழில்சூழ் கச்சிநகர் வந்துதித்த
பொய்கைபிரான் கவிஞர்போரேறு - வையத்து
அடியவர் வாழ அருந்தமிழ் அந்தாதி
படிவிளங்தச் செய்தான் பரிந்து.

தொண்டை நாட்டில், காஞ்சிபுரம் என்னும் திருமாநகரில் உள்ள திருவேக்கா என்னும் ஊரில் வீற்றிருக்கும் யதோத்தகிரி திருக்கோயிலின் தாமரைக் குளத்தில் தான் பொய்கையாழ்வார் முதன்முதலாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த நட்சத்திரக் குறிப்புகள் அனைத்தும் அவர் கண்டெடுக்கப்பட்ட நேரத்தைக் கொண்டு கணித்ததே. அக்குளத்தின் திருப்பெயர் பொய்கை எனப்படுவதால் இவர் பொய்கையாழ்வார் என்னும் திருப்பெயரிட்டு அழைக்கப்பெற்றார். இவர் எம்பெருமான் நாராயணின் பஞ்சாயுதங்களில் ஒன்றான திருசங்கின் அம்சமாவார்.