புதன், 31 அக்டோபர், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-15. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!! ஆண்டள்

ஆண்டாள்



ஸ்ரீரஙகம் ஏன் என்ற பகுதியில்,ஸ்ரீரங்கம் பற்றியும் அந்த ஊர் ஏன் மற்ற ஊர்களை விட சிறந்தது என்பதைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் அரஙக்னை பற்றி ஆழ்வார்கள் பலரும் பாடியுள்ளதில் இதுவரை பார்த்துள்ளோம். இதில் அடுத்து!!!
எத்தனை ஆழ்வார்கள்! பனிரெண்டு ஆழ்வார்கள்! அதில் பதினோரு பேர், 
ஆன்மிகத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த சமயத்தில் அவர்களுக்கு இடையே  பெண்ணாகப் பிறந்து, அவர்களுக்கு இணையாக, ஏன் அவர்களை விட ஓரு படி மேல்  போய் அரங்கனையே தன் கணவனாக ஆக்கிக் கொண்டவள். அரங்கனுக்காக பல 
பாசுரங்களைப் பாடியுள்ளவர். அவரைப் பற்றித்தான் இந்த ’அரங்கனை ஆராதித்த  ஆழ்வார்கள்’  பகுதியில் பார்ப்போம்.
"கோதை" என்றும், "நாச்சியார்" என்றும்,"சூடிக் கொடுத்த சுடர்க்கொடி" என்றும் பல  பெயர்களைப் பெற்றவர் தான் நாம் பார்க்கப்போகும் ஆழ்வார்.
பூமிப் பிராட்டியின் அவதாரமாகவே இவரைக் கொண்டாடுகிறோம்.
ஒரு பிளாஷ்பேக்!!!!
சுயம்புமனு படைப்புத் தொழிலை ஆரம்பிக்கிறான். படைத்தவற்றை எங்கே வைப்பது?
பெருமானை நோக்கி கேட்கிறான், காரணம் பூமியை இரண்யாட்சன் மடித்து கடலுக்குள் மறைத்து விடுகிறான். நாராயணன் வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை எடுத்து வந்து தன் இடது மடியில் வைத்து, பார்க்கிறார். ( சென்னைக்கு அருகில் திருவிடவெந்தை பிரான் 
கோயில் உள்ளது )
பூமாதேவி நடுங்கிக் கொண்டிருக்கிறாள்.
"ஏன் நடுங்குகிறாய், தேவி" 
பிரான் தேவியைப் பார்த்துக் கேக்கிறான்.
"என்னை ரக்ஷித்து விட்டீர்கள், ஆனால் நமது குழந்தைகளை யார் ரக்ஷிப்பார்கள்?
அதனால்தான் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்" என்கிறாள் தேவி. 
"அவர்களுக்கு ஏது உபாயம் என்று தெரியாமல் சம்சாரத்தில் தவிக்கிறார்கள்" என்கிறாள் தேவி. 
"அவர்களால் பக்தி, கர்ம ஞானம் போன்றவைகள் அவர்களுக்குத் தெரியாது".என்கிறாள் தேவி.
"வாயால் என் நாமத்தைச் சொல்லச் சொல்லு, மனத்தால் என்னை நினைக்கச் சொல்லு, கைகளால் தூய மலர்களால் அர்சிக்கச் சொல்லு, அவர்களை நான் ரக்ஷிக்கிறேன்", 
பகவான் சொல்கிறார் தேவியிடம்.
உடன் நினைத்தாள் தேவி, கீழே இறங்குவது என்று
" இன்றோ  திருவாடிப் பூரம், எமக்காகவன்றோ 
    இங்காண்டாள வதரித்தாள்-குன்றாத 
 வாழ்வான வைகுந்தவான் போகந்தன்னை 
    யிகழ்ந்து   ஆழ்வார் திருமகளாராய்
என்று சுகமான வைகுந்தத்தை விட்டு, நமக்காக வையகத்தில் விஷ்ணு சித்தர் மகளாக  வந்து பிறந்தாள்.
பூமிப்பிராட்டியின் அம்சமாக ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாருடைய துளசி தோட்டத்தில் 



திருத்துழாய் செடியின் கீழ் அவதரித்தாள். கோதை என்று திருநாமம் சூட்டி,  அக்குழந்தையை சீராட்டி பாலூட்டி வளர்த்து, பரம ஞானத்தையும் வளர்த்து வந்தார் .
தன் இளம் பிராயத்திலேயே. ஆண்டாள் அரங்கனுக்கு என பத்துப் பாசுரங்களைப் பாடியுள்ளார். சிலர் திருப்பாவை முப்பது பாசுரஙக்ளூம் அரஙகனுக்கு என்று சொல்பவர்களும் உண்டு.அதைப் பற்றி
பின்னர் பார்ப்போம். எல்லா ஆழ்வார்களும் சேர்ந்து என்ன சாதித்து இருப்பார்களோ அதனை சிறு வயதிலேயே சாதித்தவர் ஆண்டாள். திருப்பாவை தெரியாதவர்கள் இந்த அவனியில் யாரும் 
கிடையாது. ஆண்டாளின், திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி என்ற இரண்டும் முதலாயிரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவளைச் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்பார்கள்.
சிறு வயது முதற்கொண்டு கண்ணனே என உறுதி கொண்டு,
அவனுக்கு என, தன் தகப்பனார், பெரியாழ்வார், பகபானுக்கு என்ன வந்துவிடுமோ என்று எப்போதும் நினைக்கும் இவர்,
வடபெருங்கோயில் பெருமானுக்கு என கட்டிய புஷ்ப மாலையை, தானே சூட்டிக் கொண்டு,  நாம் கண்ணாடியில் பார்ப்பது போலே, தன் வீட்டில் உள்ள கினற்றில் அழகு பார்த்துக்  கொள்வாள். அலஙாரம் தனக்கு என சூட்டிக் கொள்வதில்லை,
இவை எல்லாம் கண்ணனுக்கு என்பதில் உறுதி பூண்டிருந்தாள். 
“எந்த திவ்யதேசப் பெருமாளை உன் மனதில் கொண்டுள்ளாய்” என்று பெரியாழ்வார்  கேப்பதற்கு
“மானிடருக்கு என பேச்சுப்படில் வாழ்கில்லேன் மன்மதனே” 
என்று தன் தகப்பனாருக்கு பதில் கூறுகிறாள். 
”ஆண்டாளை அழைத்து வா”, என்று பெருமாளும் ஆணையிட,ஆழ்வாரும் மூடு பல்லக்கில்  ஆண்டாளை ஸ்ரீரஙத்துக்கு அழைத்து வர, கர்ப்ப கிரகத்தின் அருகே அழைத்து கொண்டு வந்து நிறுத்தினார்.
திருமணத்திருவாசல் அருகே சென்று திருக்கமலப் பாதத்தை தொட அப்போதே ஆண்டாளும் பரம பதத்திற்கு சென்று விடுகிறாள் என்பது தான் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகும்.
ஒரு பெண்ணால் தான் இத்தனை நளினமான விஷயங்களை வெளிப்படுத்த முடியும் என்பதனை ஆண்டாளின் பாசுரங்களிள்
பார்க்கலாம்.
               அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
ஆதரிதெழுந்த என் தடமுலைகள்
             துவரை பிரானுக்கென்ற சஙக்ற்பித்துத் தொழுது வைத்தேன்
என்று நளினமான விஷயங்களை ஆண்டாள் வெளிப்படுத்துகிறார்.
ஆண்டாளின் திருப்பாவையை, “சங்கத்தமிழ்மாலை” என்றும் சொல்வார்கள்.
கண்ணனை வணங்கிய பெண்ணாகத் தன்னை பாவித்துக் கொண்டு, ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகக் நினைத்துக் கொண்டு, வடபெருங்கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும்
நினைத்து அதில் உள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து அந்தப் பெண்கள் செய்த நோன்பினை ஆண்டாள் செய்துள்ளார்.
ஆண்டாளின் திருப்பாவையில், நோன்பிற்க்காக செய்யும் காரியங்கள், மழை எப்படிப் பெய்கிறது என்பதை விளக்குவது, வடமதுரை மன்னனை வாயினால் பாடி, மனதினால் சிந்தித்தால் முன்னர் செய்த பாவங்களும், வரப் போகிற பாவங்களும் நெருப்பில் இட்ட தூசி போல ஒழியும் 
என்று சொல்கிற இடத்திலும், அதிகாலையில் நிகழ்கிற சப்தங்களை சொல்வதிலும், தோழி தூங்குவதை கும்பகர்ணனுக்கு ஒப்பிடுவதிலும், இந்த முப்பது பாசுங்களையும் பாடுவர்களுக்கு கிடக்கும் பலன்களை சொல்லுவதிலும் ஆண்டாளுக்கு இணையாக யாரையும் ஒப்பிடமுடியாது.

ஆண்டாள் பெண்கள் போகப் பொருள் அல்ல,பகவானை எழுப்பி அவனை அடையலாம் என்பதை உணர்த்துகிறார்.
தன் 142 பாசுரஙகள் கொண்ட ‘நாச்சியார் திருமொழி’ யில் ஒரு பெண் தன் காதலனை அடைய செய்ய வேண்டிய பிராத்தனைகள், குட்டி தெய்வங்களிடம் வேண்டுதல், இயற்கையிடம் வேண்டுதல், பறவைகளிடம் வேண்டுதல், ’திருமாலை’யே தன் மணவாளனாகத் தேர்ந்தெடுத்து அவனேயே  மணமுடிப்பதை ‘வாரணமாயிரம்’ என்ற பாசுரஙகளின் வாயிலாக வெளிப்படுத்தும் விதம் போன்றவை ஒரு மானிடப்பெண்ணிடம் இருக்குமா என்று சந்தேகப்படும்படி செய்துவிடுகிறார்.
திருவரங்கனை தன்னுடைய இன்தமிழால், ’செங்கோலுடைய திருவரங்கச் செல்வன்’ என்றும்,
‘நளிர் அரங்க நாகனையான்’ என்றும், ‘என்னமுதர்’ என்றும் பலவாறாக நாச்சியார் திருமொழியில் விளக்குகிறார்.
அரங்கனுக்கு என 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.