வியாழன், 8 செப்டம்பர், 2011

பெரியாழ்வார் அரங்கனைப் பற்றிய பாசுரங்கள்



பெரியாழ்வார் 
திருவில்லிப்புத்தூர் என்னும் பாண்டிய நாட்டில் முகந்த பட்டர்
என்னும் சோழிய பிராமனர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும்
பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது.
விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.
இயல்பாகவே வாடா பெருங்கோவிலுடையானிடம் பக்தி கொண்டு இருந்தார்.அவருக்கு நந்தவனத்தில் இருந்து புஷ்பங்களைப் மாலையாகக் கட்டி பெருமானுக்குச் சாற்றுவதை  வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்தசமயத்தில் பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் ஓர் இரவு
நகர்வலம் வரும்போது  திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு
வழிபோக்கனைக்  கண்டான். அவனை எழுப்பி “நீ யார்?”  என்று கேட்டான்.
அந்தப் புதியவன் “ஐயா!  நான் ஒரு அந்தணன். கங்கையில் நீராடி
வருகிறேன்“ என்றான். மன்னன் அவனை “உனக்குத் தெரிந்த நீதி ஏதும்
உண்டாகில் சொல்“ என்று கேட்டான். அவனும் “மழைக்காலத்தின்
தேவையை மற்ற எட்டு மாதங்களில், இரவின் தேவையை பகலில்,
முதுமையின் தேவையை இளமையில்,  மறுமையின் தேவையை
இம்மையில் தேட முயற்சி செய்ய வேண்டும்“ என்றான். மன்னன்
மறுநாள் தன் குலகுருவான செல்வநம்பியிடம் இரவு நடந்தவை
சொல்லி “மறுமைக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சி என்ன?”  என்று கேட்டான்.

செல்வநம்பி “நாட்டின் சான்றோரைத் திரட்டி அவர் முன் இக்கேள்வியை
வைப்போம். சரியான விளக்கம் தருவோருக்கு தக்க பரிசாக பொற்கிழி
அளிப்போம்“ என்றான். மன்னனும் மிகுந்த பொற்காசுகளை கொண்ட
பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோரைத் திரட்ட
ஆணையிட்டான்.

ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய
எம்பெருமான் ஸ்ரீ வல்லபத்தேவன் அரசவையில் நடந்த விபரங்களைக்  கூறி
கிழியை அறுத்து வாவென்றார். இது இறைவன் ஆணை என மதுரைக்குப் புறப்பட்டார்.

மதுரையில் ஆன்றோர் நிரம்பிய மன்னனின் அவையை அடைந்தபோது
அரசனும் செல்வநம்பியும் அவரை வரவேற்று பணிந்தனர். அங்கிருந்த
மற்ற அறிஞர்கள் வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன்
வரவேற்பதா?  என்று சலசலத்தனர். ஆழ்வாரும் உண்மையான பரம்பொருள்
திருமாலே என்றும் வைஷ்ணவமே முக்தியளிக்கும்  மதம் என வேதத்தை எடுத்து உவமானம் கூற பொற்கிழி தானாகவே வளைந்து கொடுத்தது.
ஆழ்வாரும் வேந்தரும் மாந்தரும் வியக்க விரைந்து கிழியறுத்தார்.

இது கண்ட மன்னனும், நம்பியும், மற்றுள்ள ஆன்றோரும், மக்களும்
அவரைப் பணிந்தனர். மன்னன் இவருக்கு பட்டர்பிரான் என்ற விருது
கொடுத்து யானை மேலேற்றி “வேதப்பயன் கொள்ள வல்ல மெய்நாவன்
வந்தான்“ என்ற விருது ஊதச்செயது தானும் தன் பரிவாரங்களும்
உடன்வர நகர்வலம் வந்தான். இக்கோலகலத்தைக் காணுமாறு தன்
மக்களை அரசன் பணித்தபோது தன்னுடைய பக்தனின் மாட்சிமை காண
வந்தாற்போல் ஸ்ரீமன் நாராயணன் கருடன் மீதேறி, பிராட்டியருடன்,
தனக்குரிய ஆயுதங்கள் தரித்து, பிரம்மா ஆருத்ரன் மற்றும் இந்திரன்
முதலான தேவர்கள் துதிக்க காட்சி தந்தார். ஆழ்வார் எமபெருமானின்
கண்ணுக்கினிய பேரழகைக் கண்டு மனமகிழ்ச்சி அடைந்தாலும், அவர்
மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி, தான் அமர்ந்திருந்த
யானையின் கழுத்து மணியைத் தாளமாகக் கொண்டு, “பல்லாண்டு
பல்லாண்டு பல்லாயிரமாண்டு பலகோடி நூறாயிரம்” என வாழ்த்தி
திருப்பல்லாண்டு பாடி அருளினார். மன்னன் மற்றுள்ள பக்தர்களையும்
தன்னோடு பாடச்செய்தார்.இந்த திவ்ய தேசத்தில் விளைந்த இப்பல்லாண்டு தான் எல்லாத் தலங்களிலும் இறைவனுக்கு திருப்பல்லாண்டாக முதன் முதலில் பாடுவதாக  அமைந்து விட்டது. இவர் கண்ணனது திருஅவதாரச் செயல்களை போற்றி 44 திருமொழிகளாகப் பாடினார்.

இவற்றின் மொத்த பாசுரங்கள் 461 ஆகும். திருப்பல்லாண்டு பாசுரங்கள் 12 ஆகும்
மொத்தம் சேர்த்து 473 பாசுரங்கள். இவருடைய பாசுரங்கள்
பெரியாழ்வார் திருமொழி என்று அழைக்கப்பட்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதலில் வைக்கப்பட்டுள்ளது.
இவர் பாடிய தலங்கள்
1. திருவரங்கம்
2. திருவெள்ளறை
3. திருப்பேர்நகர்
4.கும்பகோணம்
5. திருக்கண்ணபுரம்
6. திருச்சித்திரக்கூடம்
7. திருமாலிருஞ்சோலை
8. திருக்கோட்டியூர்
9. திருவில்லிப்புத்தூர்
10. திருக்குறுங்குடி
11. திரு வேங்கடம்
12. அயோத்தி
13. சாளக்கிராமம்
14. பத்ரிநாத்
15. தேவப்ரயாகை
16. துவாரகை
17. மதுரா
18. ஆய்ப்பாடி
19. திருப்பாற்கடல்
20. பரமபதம்.



அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

பெரியாழ்வார் திருவரங்கனைப் பற்றி 35 பாடல்கள் பாடியுள்ளார்.
அவை திருமொழி, என்று பெயரில் வழங்கப்படுகிறது.
அவற்றை பின் வரும் பகுதிகளில் காணலாம்.

 முதல் பகுதி
திருப்பல்லாண்டு பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்.

நாத முனிகள் அருளிச் செய்தது.

குருமுக மனதீத்ய ப்ராஹவேதான சேஷாந்
நரபதி பரக்லுப்தம் ஸுல்க மாதாது காம:!
ஸ்வஸுர மமரவந்த்யம்ரங்கனாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுலதிலகம்தம்  விஷ்ணுசித்தம்  நமாமி !!

பாண்டியப் பட்டர் அருளிச் செய்தது.

மின்னார் தடமதில்சூழ் வில்லிபுத்தூரென்று  ஒரு கால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம்* - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம்,* கீழ்மையினிற்சேரும் -
வழியறுத்தோம்  நெஞ்சமே ! வந்து

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று*
ஈண்டியசங்கம் எடுத்தூத*-- வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்*
பாதங்கள் யாமுடைய பற்று.
திருமொழி
1. கருவுடை மேகங்கள் கண்டால்* உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள்*
  உருவுடையாய்! உலகேழும்* உண்டாக வந்து பிறந்தாய்!*
  திருவுடையாள் மணவாளா!* திருவரங்கத்தே கிடந்தாய்!*
  மருவி மணம் கமழ்கின்ற* மல்லிகைப் பூச் சூட்டவாராய் . 2.7.2

2.சீமாலிகன் அவனோடு* தோழமை கொள்ளவும் வல்லாய்*
 சாமாறு அவனை நீ எண்ணிச்* சக்கரத்தால்த்தலைக்கொண்டாய் !*
 ஆமாரறியும் பிரானே! அணியரங்கத்தே கிடந்தாய்!*
 ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்!* இருவாட்சிப் பூச் சூட்ட வாராய். 2.7.3

3.வண்டு களித்திருக்கும் பொழில்சூழ்
 வருபுனல் காவிரி தென்நரங்கன்
பண்டவன் செய்த கிரிடையெல்லாம் பட்டர்பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக்குனிக்க வல்லார்
கோவிந்தன் அடியார்களாகி என் திசைக்கும்  விளக்காகி நிற்பார்
இணையடி என் தலை மேலனவே                              

4.கண்ணி நன் மாமத்தில் சூழ்தரு* பூம்பொழில் காவிரித் தென்னரங்கம்*
 மன்னியசீர் மதுசுதனா! கேசவா!* பாவியேன்வாழுகந்து*
 உன்னை இளங்கன்று மேய்க்கச்* சிறுகாலேயூட்டி ஒருப்படுத்தேன்*
 என்னில் மனம் வலியாள் ஒரு பெண் இல்லை* என் குட்டனே முத்தம்தா. 3.3.2


தொடருவோம்









சனி, 18 ஜூன், 2011


குலசேகரஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சிக்களம் கேரளா.

குலசேகரஆழ்வார்


குலசேகர ஆழ்வார்- தொடர்ச்சி
அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்க‌நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

குலசேரகப்பெருமாள், பெருமாள் மீது பக்தி சொட்ட சொட்ட
பாடல்கள் பாடியுள்ளார்.
அவை "பெருமாள் திருமொழி" என்று அழைக்கப்படுகிறது.
105 பாசுர‌ங்கள் கொண்டதாகும் அது.
இதில் அரங்கனாதனைப் பற்றி முதல் திருவந்தாதியில்
பதினோரு பாசுரங்கள் பக்தி சொட்ட சொட்ட
பாடியுள்ளார் என்றால் பாருங்கள்.
இரண்டாம் திருவந்தாதியில் ஒன்பது பாடல்களைப் பாடியுள்ளார்.
மூன்றாம் திருவந்தாதியில் பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் கண்ணபிரானைப் பற்றி வடமொழியில் " முகுந்த மாலை" என்ற
பக்தி ரசம் சொட்டும் பாசுரங்களையும் பாடியுள்ளார்.
இதில் என்ன முக்கியமானது என்றால் வடமொழியில் பாசுரங்களை
இயற்றிய ஒரே ஆழ்வார் "குலசேகர ஆழ்வார்" மட்டுமே.
குலசேகர ஆழ்வாரை பெருமாள் அணியும் கௌஸ்துபம் என்ற மாலையின் அம்சமாகக் கருதுவார்கள்
குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்வசு நகஷ்த்திரத்தில்
திருவஞ்சிக்களம் என்ற‌
ஊரில் (கேரளாவில் திருச்சூருக்கு அருகாமையில் உள்ளது) பிறந்தார்.

மூன்றாம் திருமொழி.

1.மெய்யில் வாழ்க்கையை* மெய்யெனெக் கொள்ளும்* இவ்
வையம் தன்னோடும்* கூடுவது இல்லையான்*
ஐயனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்* எந்தன் மாலுக்கே.

2.நூலினேரிடையார்* திறத்தே நிற்கும்*
ஞாலம் தன்னோடும்* கூடுவதில்லையான்*
ஆலியா அழையா* அரங்கா! என்று*
மாலெழுந்து ஒழிந்தேன்* எந்தன் மாலுக்கே.

3.மாரனார்* வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும்*
பாரினாரொடும்* கூடுவதில்லையான்*
ஆர மார்வன்* அரங்கன் அனந்தன்* நல்
நாரணன்* நரகாந்தகன் பித்தனே.

4.உண்டியே உடையே*உகந்ததோடும்,* இம்
மண்டலத்தோடும்* கூடுவது இல்லையான்*
அண்ட வாணன்* அரங்கன் வ்ன் பேய்முலை*
உண்ட வாயன் தன்* உன்மத்தன் காண்மினே.

5.தீதில் நன்னெறி நிற்க* அல்லாதுசெய்*
நீதி யாரொடும்* கூடுவது இல்லையான்*
ஆதி ஆயன்* அரங்கன், அந்தாமரைப்*
பேதை மாமணவாளன்* தன் பித்தனே.

6.எம்பரத்தர்* அல்லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வை* ஒன்றாக கருதிலன்*
தம்பிரான்* அமரர்க்கு அரங்க நகர்*
எம்பிரானுக்கு* எழுமையும் பித்தனே.


7.எத்திரத்திலும்* யாரொடும் கூடும்* அச்
சித்தந் தன்னைத்* தவிர்த்தனன் செங்கண்மால்*
அத்தனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பித்தனாய் ஒழிந்தேன்* எம் பிரானுக்கே.

8.பேயரே* எனக்கு யாவரும்* யானும் ஓர்
பேயனே* எவர்க்கும் இது பேசியென்*
ஆயனே!* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்* எம் பிரானுக்கே.

9.## அங்கை யாழி* அரங்கன் அடியினை*
தங்கு சிந்தை* தனிப்பெரும் பித்தனாய்*
கொங்கர் கோன்* குலசேகரன் சொன்னசொல்*
இங்கு வல்லவர்க்கு* ஏதமொன்றில்லையே (2)


10.## தேவரையும் அசுரரையும்* திசைகளையும் படைத்தவனே*
யாவரும் வந்து அடி வணங்க* அரங்கநகர்த் துயின்ற‌வனே*
காவிரிநல் நதிபாயும்* கணபுரத்தென் கருமணியே*
ஏவரிவெஞ் சிலைவலவா* இராகவனே தாலேலோ. (2)

சனி, 14 மே, 2011








குலசேகரஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சிக்களம் கேரளா.


குலசேகரஆழ்வார்










குலசேகர ஆழ்வார்
ஆரம் கெடப்பர
ன் அன்பர் கொள்ளார்* என்று அவர்களுக்கே
வாரம் கொடு குடப் பாம்பில் கையிட்டவன்* மாற்றலரை
வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன்* வில்லவர்கோன்
சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகாமணியெ.

மேலே குறிப்பிட்ட பாடல் எதைப் பற்றித் தெரியுதா?

அது குலசேகர ஆழ்வார் பற்றிய சரித்திரம் தெரிந்தால் உஙகளுக்குப் புரிந்துவிடும்.
அது என்னய்யா சரித்திரம் என்கிறீர்களா?
குலசேகரர் சேரநாட்டை ஆண்டு வந்தார்.அவர் வீரமும் விவேகமும் உடைய அரசராக சிறப்பாக ஆண்டு வந்தார். கடவுள் பக்தி உடையவர்.
ரங்கனாதரி
டம் தீவிர பக்தி கொன்டவன்.இவருடைய பக்தி ம்ற்றும் ஆற்றலைக் கன்டு பான்டிய ராஜா தன் பெண்ணை இவருக்கு மணம் முடித்தான். இவருக்கும் ஒர் ஆண் மகவு பிறந்த‌து.மகனுக்கு திடவிரதன் என்று பெயர் சூட்டினான்.
நாளாக நாளாக,போரில் பல உயிர்கள் மடிவது குலசேகருக்கு வேதனையைக் கொடுத்தது.
ராமனைப் பற்றி உபன்யாசஙகள் கேட்பதில் ஆர்வம் கொன்டவனாக
இருந்தான்.அந்த சமயத்தில் உபன்யாசகர், ராமன் அசுரர்களை அழிக்க இலக்குமணனை சீதா பிராட்டிக்கு காவல் வைத்து விட்டு சென்றதை விவரித்துக் கொன்டிருந்தார். இதைக் கேட்ட,குலசேகரர உடனே தன் சேன்யங்களை ராமனுக்கு உதவச் செல்லும்படி ஆனைஇட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.உபன்யாசகர் ராமர் தனியாகவே அசுரரகளை வென்று விட்டார்,மற்றும் இது நடந்த்து திரேதாயுகத்தில்,இப்போது அல்ல என்று சொல்ல பின்பு தான் அமைதியானார் என்றால் பார்த்துக்கொள்ளுஙகள்.
இவர் அனுதினமும் பூஜை செய்வதற்காக ஒரு ராமர் விக்கிரஹத்தை சிலை
வடிவ
த்தில் செய்து பூஜித்து கொன்டே இருந்தார், நாட்டின் மீது அக்கரை இல்லாமல் இருந்து வந்தார்.இதை அறிந்த அமைச்சர்கள்,இப்படியே போனால் நாட்டின் நிலைமை மோசமாகிவிடும் என்று நினைத்து, ராமர் விக்கிரஹ்த்தின் மேல் இருந்த ஒரு நவரத்தின மாலையை எடுத்து ஒளித்து வைத்து விட்டு,அந்தப் பழியை விஷ்னு பக்தர்கள் மேல் போட்டு விட்டனர் என்றால் பாருங்கள்.
இதை அறிந்த குலசேகரர், புழுவாகத் துடித்தார்."விஷ்ணு பக்தர்கள் ஒரு நாளும் அப்படிச் செய்து இருக்கமாட்டார்கள். அவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப் பட மாட்டார்கள்" என்று திடமாக நம்பினார்.
இதனை மெய்ப்பிக்க உடனே மெய்க்காவலர்களைக் கூப்பிட்டு ஒரு குடத்தை எடுத்து வரச் சொன்னார். அதில் ஒரு பாம்பை போட்டார்."விஷ்ணு பக்தர்கள் மாலையை எடுத்து இருந்தார்கள் எனில் இந்தப் பாம்பு என் கைகளைக்
கடிக்கட்டும" என்று கைகளை குடத்துக்குள் விட்டார். என்ன அதிசியம் பாருங்கள்
பாம்பு அவரை ஒன்றும் செய்யவிலை.
இதனைக் கணட‌அமைச்சர்கள் மறைத்து வைத்திருந்த மாலையை திருப்பிக் கொடுத்து தாங்கள் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டனர் என்றால் பாருங்
கள்.
இதனைத் தான் "வாரம் கொடுகுடப் பாம்பில் கையிட்டவன்" என்று தனியனாக முன்னர் பார்த்தோம்.
இப்போது புரிந்ததா, குலசேகரனின் விஷ்ணு பக்தி?
இதனால் மனம் நொந்த குலசேகரர் அரசாட்சியை தன்னுடைய புதல்வனிடம் அளித்து விட்டு,இராமபிரானின் பல்வேறு புனிதத் தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டார்.
இராம பிரானைப் போலவே அரங்கனாதனிடமும் பக்தி கொண்டிருந்தார்.பெருமாளிடம் அதிக பக்தி கொனண்டிருந்ததாலோ என்னவோ,
இவர் "குலசேகரப் பெருமாள்"
என்று அழைக்கப்பட்டார்.
குலசேரகப்பெருமாள், பெருமாள் மீது பக்தி சொட்ட சொட்ட பாடல்கள் பாடியுள்ளார்.அவை "பெருமாள் திருமொழி" என்று அழைக்கப்படுகிறது.
105 பாசுர‌ங்கள் கொண்டதாகும் அது.
இதில் அரங்கனாதனைப் பற்றி முதல் திருவந்தாதியில் பதினோரு பாசுரங்கள் பக்தி சொட்ட சொட்ட பாடியுள்ளார் என்றால் பாருங்கள்.
மேலும் கண்ணபிரானைப் பற்றி வடமொழியில் " முகுந்த மாலை" என்ற பக்தி ரசம் சொட்டும் பாசுரங்களையும் பாடியுள்ளார். இதில் என்ன முக்கியமானது என்றால் வடமொழியில் பாசுரங்களை இயற்றிய ஒரே ஆழ்வார் "குலசேகர ஆழ்வார்" மட்டுமே.
குலசே
கர ஆழ்வாரை பெருமாள் அணியும் கெளசத்துபம் என்ற மாலையின் அம்சமாகக் கருதுவார்கள்.
குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்வசு நகஷ்த்திர்த்தில் திருவஞ்சிக்களம் என்ற‌
ஊரில் (கேரளாவில் திருச்சூருக்கு அருகாமையில் உள்ளது) பிறந்தார்.






அரங்கநாதர் கருடசேவைக் காட்சி







பெருமாள் திருமொழி தனியன்கள்.

உடையவர் அருளிச் செய்தது

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே*
தென்னரங்கம் பாடவல்ல சீர்பெருமான்‍பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன்* எங்கள
குலசேகரன் என்றெ கூறு.

ஆரம் கெடப்பரன் அன்பர் கொள்ளாரென்று* அவரகளுக்கே
வாரங் கொடு குடப் பாம்பில் கையிட்டவன்* மாற்றலரை
வீரங்கெடுத்த செங்கோல் கொல்லி காவலன்* வில்லவர் கோன்
சேரன் குலசேகரன் முடிவேந்தர் சிகாமணியே.

குலசேகரர் பெருமாள் திருமொழி.

1.இருளிரியச் சுடர்ம‌ணிகள் இமைக்கும் நெற்றி*
இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த*
அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்னும்*
அணிவிளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி*
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி*
திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்*
கருமணியைக் கோமளத்தை கண்டு கொண்டு* என்
கண்ணிணைகள் என்று கொலோ களிக்கும் நாளே.

2. வாயோர் ஈர் ஐ நூறு நுதங்கள் ஆர்த்த*
வளையுடம்பின் அழல்நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்சென்னி விதானமே போல்*
மேன்மெலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்*
காயாம்பூ மலரப் பிறங்கல் அன்ன மாலைக்*
கடியரங்கத்து அரவணையில்பள்ளி கொள்ளும்*
மாயோனை மனத்தூணெ பற்றி நின்று* என்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே?

3. எம்மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி* ஈரிரண்டு முகமும் கொண்டு*
எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்*
தொழுதேத்தி இனிதிரைஞ்ச நின்ற* செம்பொன்
அம்மான் தன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற*
அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*
அம்மான் தன் அடியிணைக்கீழ் அலர்களிட்டு*
அங்கு அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே?

4. மாவினைவாய் பிளந்துகந்த மாலை*வேலை
வண்ணணை என் கண்ணணை வன்குன்றமேந்தி*
ஆவினை அன்று உய்யக்கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அந்த்மிழ் இன்பப்
பாவினை* அவ்வடமொழியைப் பற்ற்ற் றார்கள்*
பயிலற‌ங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*
கோவினை நாவுற் வழுத்தி எந்தன் கைகள்*
கொய்ம் மல்ர்தூய் என்று கொலோ கூப்பும் நாளே?

5 இணையில்லாஇன்னிசை யாழ் கெழுமி* இன்புத்
தும்புரூவும் நாரதனும் இறைஜஞ்சி ஏத்த*
துணையில்லாத் தொன் மறைநூல் தோத்திரத்தால்*
தொன்மலர்க் கண் அயன் வணங்கி ஓவாதேத்த*
மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ*
மதிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*
மணிவண்ணன் அம்மானை கண்டு கொண்டு* என்
மலர்சென்னி என்று கொலோ வண்ங்கும் நாளே?

6 அளிமர்மேல் அயன் அரன் இந்திரனோடு* ஏனை
அமரர்கள் குழுவும் அரம்பையரும் மற்றும்*
தெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்*
திசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும்*
களிமலர்சேர் கடல்வண்ணர் கமலக் கண்ணும்*
ஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டு* என்
உள்ளமிக என்றுகொலோ உருகும் நாளே?

7. மறம் திகழும் மனமொழிந்து வஞ்ச மாற்றி*
ஐம்புலங்கள் அடக்கி இடர் பார‌த் துன்பம்
துறந்து* இரு முப்போழுது ஏத்தி எல்லையில்லாத்
தொன்னெறிக் கண்* நிலை நின்ற தொண்டரான*
அறம் திகழும் மனத்தவர் தம் கதியைப் பொன்னி*
அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்*
நிறம் திகழும் மாயோனைக் கண்டு என் கண்கள்*
நீர்மல்க என்று கொலோ நிற்கும் நாளே.

8.கோலார்ந்த நெடுஞ் சார்ங்கம் கூனற் சங்கம்*
கொலையாழி கொடுந் தண்டு கொற்ற ஒள்வாள்*
காலார்ந்த கதிக் கருடனென்னும்* வென்றிக்
கடும்பறவை இவையனைத்தூம் புற்ஞ்சூழ் காப்ப*
சேலார்ந்த நெடுங்கழனி சோல சூழந்த*
திருவரங்க தரவனையில் பள்ளி கொள்ளும்*
மாலோனைக் கண்டு இன்பக் கலவி எய்தி*
வல்வினையேன் என்று கொலோ வாழும் நாளே?

9. தூராத மனக்காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமித்* திருப்புகழ்கள் பலவும் பாடி*
ஆராத மனக்களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர* நினைந்துருகி ஏத்தி* நாளும்-
சீரார்ந்த முழவோசை பரவை காட்டும்*
திருவரங்க தரவனையில் பள்ளி கொள்ளும்*
பேராழி அம்மானைக் கண்டு துள்ளிப்*இப்
பூதலத்தில் எறு கொலோ புரளும் நாளே?

10.வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய‌-
மண்ணுய்ய* மண்ணுலகில் மனிசர் உய்ய*
துன்பமிகு துயர் அகல* அயர்வு ஒன்ற்றில்லாச்
சுகம் வளர* அகமகிழும் தொண்டர் வாழ*
அன்போடு தென் திசை நோக்கி பள்ளீ கொள்ளூம்*
அணியரங்கன் திருமுற்றத்துஅடியார் தஙகள்*
இன்பமிகு பெருங்குழவு கண்டு* யானும்-
இசைந்துடனே என்று கொலோ இருக்கும் நாளே?

11 .திடர் விள்ங்கு கரைப் பொன்னி நடுவு பாட்டு*
திருவரங்க தரவனையில் பள்ளி கொள்ளூம்*
கடல்விளங்கு கரு மேனி அம்மான் தன்னைக்*
கண்ணாரக் கண்டு உகக்கும் காதல் த்ன்னால்*
குடைவிள‌ங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள்*
கூடலர் கோன் கொடைகுலசேகரன் சொற்செய்த*
நடைவிளங்கு நாரணண் அடிகீழ் நண்ணுவாரே.

இரண்டாம் திருமொழி.

12. தேட்டரும் திறல் தேனினைத்* தென்னரங்கனை* திருமாதுவாழ்
வாடடமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால்கொள் சிந்தையராய்*
ஆட்டமேவி யலந்தழைத்து* அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம்*
ஈட்டம் கண்டிடக் கூடுமேலது காணும் பயனாவதே.

13. தோடுலா மலர் மங்கை தோளினைத்* தோய்ந்ததும்* சுடர்வாளியால்*
நீடுமராமரம் செற்றதும்* நிரைமேத்ததும் இவையே நினைந்து*
ஆடிப்பாடி அரங்கவோ என்றழைக்கும்*தொண்டர் அடிப்பொடி ஆட‌
கங்கை நீர் குடைந்தாடும்* வேட்கை என்னாவதே.

14. ஏறடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்* முன் இராமனாய்*
மாறடர்த்ததும் மண்ணளந்ததும்* சொல்லிப் பாடி*
வண் பொன்னிப்பேராறு போல் வரும் கண்ணனீர் கொண்டு* அரங்கன்கோயில் திருமுற்றம்*
சேறு செய் தொண்டர் சேவடிச் செழும்சேறு என் சென்னிக் கணிவனே.


15. தோய்த்த தண்தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும்* உடன்று ஆய்ச்சி கண்டு*
ஆர்த்த தோளுடை எம்பிரான்* என்னரங்கனுக்கு அடியார்களாய்*
நாத்தழும்பெழ நாரணா என்றழைத்து* மெய் தழும்பத் தொழுது
ஏத்தி,*இன்புறும் தொண்டர்சேவடி* ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே.


16. பொய்சிலைக் குரல் ஏற்று எறுத்தம் இறுத்து* போரர வீர்த்தகோன்*
செய்சிலைச்சுடர் சூழொளித்*திண்ண மாமதிள் தென்னரன்ங்கனாம்*
மெய்சிலைக் கருமேகம் ஒன்று* தம் நெஞ்சில் நின்று திகழப்போய்*
மெய்சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என்மனம் மெய் சிலிர்க்குமே.


17. ஆதி அந்தம் அனந்தம் அற்புதமான* வனவர் தம்பிரான்*
பாதமாமலர் சூடும் பத்தியிலாத* பாவிகள் உயிந்திட*
தீதில் நன்னெறி காட்டி* எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
காதல் செய்தொண்டர்க்கு எப்பிறப்பிலும்* காதல் செய்யும் என் நெஞ்சமே.

18. காரினம் புரை மேனி நல் கதிரமுத்த* வெண்ணகைச் செய்யவாய்*
ஆரமார்வன் அரங்கனென்னும்* அரும் பெருஞ்சுடர் ஒன்றினை*
சேரும் நெஞ்சினராகிச்* சேர்ந்து கசிந்திழிந்த கண்ணீர்களால்*
வார நிற்பவர் தாளிணைக்கு* ஒரு வாரமாகும் என் நெஞ்சமே

19. மாலையுற்ற கடல் கிடந்தவன்* வண்டு கிண்டு ந‌றுந்துழாய்*
மாலையுற்ற வரைப் பெருந் திருமார்வனை மலர்க் கண்ணனை*
மாலையுற்று எழுந்தாடிப் பாடி* திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
மாலையுற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு* மாலையுற்றது என் நெஞ்சமே

20. மொய்த்து கண்பனி சோர மெய்கள் சிலிர்ப்ப* ஏங்கி இளைத்து நின்று*
எய்த்து கும்பிடு நட்டமிட்டெழுந்து* ஆடிப்பாடி இறைஞ்சி* என்
அத்தன் அச்சன் அரங்கனுக்கு அடியார்களாகி* அவனுக்கே
பித்தராமவர் பித்தர் அல்லர்கள்* மற்றையார் முற்றும் பித்தரே.

21. அல்லிமாமலர் மங்கைநாதன்* அரங்கன் மெய்யடியார்கள் தம்*
எல்லையில் அடிமைத் திறத்தினில்* என்றும் மேவு மனத்தனாம்*
கொல்லிகாவலன் கூடல்நாயகன்* கோழிக்கோன் குலசேகரன்*
சொல்லின் இந்தமிழ் மாலை வல்லவர்* தொண்டர் தொண்ட்ர்கள் ஆவரே.


புதன், 2 மார்ச், 2011

நம்மாழ்வார்.






அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?

அனைத்துஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்.
"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களைஅனுசரிக்க ஏதுவாக என்னால்முடிந்த அளவு ஒரே இடத்தில். கொடுத்து உள்ளேன்.ஸ்வாமிதேசிகன்அவர்கள் தன்னுடையஅதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறுஎழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே


ஆழ்வார்திருநகரி கோயில்


நம்மாழ்வார்


சடாரி





நம்மாழ்வாரின் சரித்திரம்.

நம்மாழ்வார், 7ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் அவர் சேனைத்தலைவர் அம்சமாகப் பிறந்தார்.
தற்போதுள்ள பாண்டிய நாட்டில் உள்ள ஆழ்வார் திருநகரி என்ற திருக்குருகூர் தலத்தில் அவதரித்தார்.
நம்மாழ்வார், அவதரித்தபோது வாய் திறந்து அழக்கூட இல்லாததால் அவரை இறைவன் திருவடிகளில் சமர்ப்பித்தனர். அவர் தானாகவே தவழ்ந்து சென்று அருகில் உள்ள புளியமரத்தின் பொந்தில் போய் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து இருந்தார். அவர் அவ்வாறு 16 ஆண்டு காலம் மோனத்தில் இருந்தார்.
இந்த சமயத்தில் அயோத்தியில் மதுரகவி ஆழ்வார் தெற்குதிசையில் இருந்து ஒரு அதிசய ஒளியைக் கண்டார்
.
அதை நோக்கி தன் பயணத்தை மேற்கொண்டார்.

கடைசியில் நம்மாழ்வார் அமர்ந்து இருந்த புளிய மரத்தை அடைந்தார் .மதரகவியாழ்வாரும் புளிய மரத்தின் பொந்தில் அமர்ந்து

இருந்த சிறுவன் நம்மாழ்வாரைப் பார்த்தவுடன் இவர் இறைவன் அம்சம் எனக் கண்டு கொண்டார்.
நம்மாழ்வாரைப் பேச வைக்க புதிர் ஒன்றை வினவினார்.

"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,
எதைத் தின்று? எங்கே கிடக்கும்?"

இக்கேள்வியைக் கேட்டவுடன், நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடையளித்தார்.

"அதைத் தின்று; அங்கே கிடக்கும்."

அதாவது, "செத்தது" என்பது நம் உடல்; "சிறியது" என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று

தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே

இன்புறும்.அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும். என்று, அந்த உயிர்

உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு,

அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.

பதிலைக் கேட்டதும், மதுரகவியாழ்வாருக்கு, உச்சி குளிர்ந்து, உண்மை விளங்கியது. அப்பதிலால் ஈர்க்கப்பட்ட

மதுரகவியாழ்வார், அந்த கணமே நம்மாழ்வாரின் திருப்பாதத்தில் விழுந்து வணங்கி, "என்னைத் தங்கள் சீடனாக ஏற்று,

இப்பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க அருள் புரிவாய்," என்று வேண்டினார்.

நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரைத் தன் சீடனாக ஏற்று அருள் புரிந்தார். நம்மாழ்வார் பாடும் பாசுரங்களை எல்லாம்

ஏட்டுச்சுவடியில் எழுதியவரும், அதை மதுரமான இசையில் பாடியவரும் நம் மதுரகவியாழ்வாரே. ஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.

நம்மாழ்வார் தான் இருந்த இடத்தை விட்டு எங்கேயும் போனதில்லை. எம்பெருமானின் 108 திவ்ய தேசங்களைப் பற்றி

நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லெட்சுமி தேவியுடன்,

தன் கருட வாகனத்தில் காட்சியளித்தனர். அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட (1102) பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,திருவிருத்தம் - இது 100 பாசுரங்களைக் கொண்டுள்ளது. இந்நூலில், அவர் ரிக் வேதத்தினுடைய சாராம்சங்களை அமைத்துள்ளார்.

திருவாசிரியம் - இந்நூல் மிகக் குறைவான பாடலைக் கொண்டுள்ளது. அதாவது 7 பாடல்கள் உள்ளன. இதில் யசூர் வேதத்தின் அம்சங்களைக்கொடுத்தருளியிருக்கிறார்.

பெரிய திருவந்தாதி - இதில் 87 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களில் அதர்வண வேதத்தின் கருத்துகளை ருசிக்கலாம்.

விருத்தம், ஆசிரியம், அந்தாதி ஆகிய மூன்றும், ஒரு வகையான செய்யுள் ஆகும. அவை இறைவனின் பெயரில் பா டப்பெற்றவையால், அவற்றிற்கு திரு என்னும் அடைமொழி சேர்த்து திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி என்று
அழைக்கப்படுகின்றன.

திருவாய்மொழி - இதில் 1102 பாடல்கள் உள்ளன. இவற்றில் சாம வேதத்தின் சங்கதிகளை சுவைக்கலாம்.

இவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார, 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்று
அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார்.

நம் மாறன், இப்படியே இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்று இவருக்காகவே சொர்க்கவாசலைத் திறந்து வைத்திருந்து, நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

நம்மாழ்வார் அரங்கன் மீது 12 பாசுரங்களை இயற்றி உள்ளார்.

நம்மாழ்வார் பற்றி பலரும் வெவ்வேறு தனியன்கள் இயற்றியுள்ளனர்.

கிடாம்பியாச்சான் திருவிருத்தம் பற்றி எழுதிய தனியன்.

கருவிருத்தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து*
ஒருவிருத்தம்புக் குழலுறுவீர்! உயிரின் பொருள்கட்கு*
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர் கோனுரைத்த*
திருவிருத்தத்து ஓரடி கற்றிரீர் திருநாட்டகத்தே.
திருவாய்மொழி பற்றிய தனியன்கள்.

நாதமுனிகள் அருளிச்செய்தது.


பக்தாம்ருதம் விஸ்வ ஜனானு மோதனம்*
ஸர்வாரத்ததம் ஸீஸடகோப வாங்க்மயம்*
ஸகஸ்ர ஸாகோப நிஷத்ஸமாகமம்*
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்

ஈஸ்வர மாமுனிகள் அருளிச்செய்தது.

திருவழுதி நாடென்றும் தென்குருகூர் என்றும்*
மருவினிய வண்பொரு நல்லென்றும்*-அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே* எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே! தெளிந்து.


சொட்டை நம்பிகள் அருளிச்செய்தது.

மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்*
இனத்தாரையல்லா திறைஞ்சேன்,*-தனத்தாலும்
ஏதும் குறைவிலேன்* எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.

அனந்தாழ்வான் அருளிச் செய்தது.

ஏய்ந்த பெருங்கீர்த்தி இராமானுசமுனிதன்*
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன்,*-ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன்வேதம்தரிக்கும்,*
பேராத உள்ளம் பெற..

பட்டர் அருளிச் செய்தவை.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்*
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும்,*-ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த*
இதத்தாய் இராமுனுசன்.

மிக்க விறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,*
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்*
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,*
யாழினிசை வேதத் தியல்.

நம்மாழ்வாரின் திருவரங்கன் பற்றிய திருவிருத்தம்.

1 தண்ணந் துழாய்* வளை கொள்வது யாமிழப்போம் , நடுவே
வண்ணம் துழாவ* ஓர் வாடையுலாவும்,* வள்வாயலகால் -
புள்நந்துழாமே பொருநீர்த்திருவரங்கா! அருளாய்*
எண்ணந் துழாவுமிடத்து,* உளவோபண்டும் இன்னன்னவே? 2505


திருவாய்மொழி பாசுரங்கள்.

2.கங்குலும் பகலும் கண் துயிலறியாள்* கண்ணநீர் கைகளால் இறைக்கும்,*
சங்கு சக்கரங்களென்று கை கூப்பும்* தாமரைக் கண் என்றே தளரும்*
எங்கனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்* இருநிலம் கை
துழாவிருக்கும்,*செங்கயல் பாய்நீர்த் திருவரங்த்தாய்*
இவள்திறத்து என் செய்கின்றாயே? 3464

3.என்செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா! என்னும்*
கண்ணீர்மல்க இருக்கும்,* என்செய்கேன் எறிநீர் திருவரங்கத்தாய்? என்னும்*
வெவ்வுயிர்த்துயிர் உருகும்,* முன்செய்த வினையே! முகப்பாய் என்னும்*
முகில்வண்ணா! தகுவதோ! என்னும்,* முன்செய்து இவ்வுலகம் உண்டுமிழந்தளந்தாய்!* என்கொலாமுடிகின்றது இவட்கே? 3465

4.வட்கிலன் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும் மையாக்கும்,*
உட்குடை அசுரர் உயிரெல்லாம் உண்ட* ஒருவனே! என்னும் உள்ளுருகும்,*
கட்கிலீ உனனைக் காணுமாறு அருளாய்* காகுத்தா! கண்ணனே! என்னும்,*
திட்கொடி மதிள்சூழ் திருவரங்த்தாய்* இவள் திறத்து என் செய்திட்டாய்? 3466

5.இட்டகால் இட்ட கைகளாய் இருக்கும்* எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்,*
'கட்டமே காதல்!' என்று மூர்ச்சிக்கும்* கடல்வண்ணா! கடியைகாண் என்னும்,*
வட்டவாய் நேமி வலங்கையா! என்னும்* வந்திடாய் எனறென்றே மயங்கும்,*
சிட்டனே! செழுநீர்த் திருவரங்த்தாய்!* இவள் திறத்து என் சிந்தித்தாயே? 3467

6.சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும்* திருவரங் கத்துள்ளாய்! என்னும்-
வந்திருக்கும்,* ஆங்கே மழைக் கண்ணீர் மல்க* வந்திடாய் என்றென்றே மயங்கும்
அந்திப்போது அவுணன் உடலிடந்தானே!* அலைகடல் கடைந்த ஆரமுதே,*
சந்தித்து உன் சரணம் சார்வதே வலித்த* தையலை மையல் செய்தானே! 3468

7.மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! என்னும்* மா மாயனே! என்னும்,*
செய்யவாய் மணியே என்னும்* தண்புனல்சூழ் திருவரங்கத்துள்ளாய்! என்னும்,*
வெய்யவாய் தண்டு சங்குசக்கரம் வில்லேந்தும் விண்ணோர் முதல்! என்னும்,*
பைகொள் பாம்பணையாய்! இவள் திறந்தருளாய்* பாவியேன் செயற்பாலதுவே 3469

8.பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்!* பறறிலார் பற்றநின்றனே,*
கால சக்கரத்தாய்! கடலிடங் கொண்ட* கடல்வண்ணா! கண்ணனே! என்னும்
சேல்கொள் தண்புனல்சூழ் திருவரஙகத்தாய்! என்னும்* என்தீர்த்தனே! என்னும்,*
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்* என்னுடைக் கோமளக் கொழுந்தே.* 3470

9.கொழுந்து வானவர்கட்கு என்னும்* குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்*
அழுந்தொழும் ஆவி அனல்வெவ்வுயிர்க்கும்* அஞ்சன வண்ணனே! என்னும்*
எழுந்துமேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்*எங்கனே நோக்குகேன்? என்னும்*
செழுந்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்!* என் செய்கேன் என் திருமகட்கே? 3471

10.என் திருமகள் சேர்மார்வனே! என்னும்* என்னுடைய ஆவியே! என்னும்*
நின்திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட* நிலமகள் கேள்வனே!
என்னும்* அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட* ஆய்மகள் அன்பனே! என்னும்*
தென்திருவரங்கம் கோயில்கொண்டானே!* தெளிகிளேன் முடிவு இவள் தனக்கே. 3472

11.முடிவு இவள் தனக்கொன்றறிகிலேன் என்னும்* மூவுலகாளியே! என்னும்,*
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்* நான்முகக் கடவுளே! என்னும்,*
வடிவுடை வானோர் தலைவனே! என்னும்* வண் திருவரங்கனே! என்னும்*
அடியடையாதாள் போலிவள் அணுகி அடைந்தனள்* முகில்வண்ணன் அடியே. 3473

12.முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி உய்ந்தவன்* மொய்புனல் பொருநல்,*
துகில்வண்ணத்தூநீர்ச் சேர்ப்பன்,*வண்பொழில்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்,*
முகில்வண்ணன் சொன்னசொல்மாலை* ஆயிரத்து இப்பத்தும் வல்லார்*,
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர்* பேரின்ப வெள்ளத்தே. 3474

ஞாயிறு, 30 ஜனவரி, 2011



அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?
அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்
"பதின்மர் பாடிய பெருமாள்"
என்று ஸ்ரீரங்நாதனை நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி
பாடிய பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

திருமழிசையாழ்வார்












திருவெஃகா என்னும் வேக சேது










ஒரு சமயம் ப்ரம்மலோகத்தில்
நாமகள் (சரஸ்வதி) மற்றும் பூமகள் (லக்ஷ்மி) இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.
நீ பெரியவளா? நான் பெரியவளா? என்று. ப்ரம்மா சும்மா இல்லாமல்,பூமகள், லக்ஷ்மி தாயார் தான் பெரியவர் என்று தீர்வுசொல்லிவிட்டு போய் விட்டார். இதேபோல எந்த நதி என்று சரஸ்வதி வினவ, ப்ரம்மா விஷ்ணுவின் பாதத்தில் இருந்துபுறப்படும் கங்கை தான் பெரிய நதி என்று பதில் கூறிவிட்டு போய்விட்டார். இதைக் கேட்ட சரஸ்வதி கோபம்
கொண்டுஅங்கிருந்து மறைந்து கங்கைக் கரை ஓரமாகச் தவம் செய்யத் தொடங்கினார்.
நான்முகன், ப்ரம்மா காஞ்சிபுரத்தில்பெரிய அஸ்வமேத யாகம் செய்ய எண்ணி ஸரஸ்வதியை தன்னுடன் இருக்க
அழைத்தார்.இதற்காக தனது மகன் வஷிஷ்டனை ஸரஸ்வதியிடம் அனுப்பினார். ஆனால் கோபம் குறையாத ஸரஸ்வதி உடன்வர மறுத்துவிடுகிறார்.எனவே ப்ரம்மதேவன் மற்ற மனைவிமார்களுடன் யாகத்தை துவக்கிவிடுகிறார்.
இதைப் பார்த்த அசுரர்கள் யாகத்தை குலைக்க எண்ணி ஸரஸ்வதியிடம் சென்று விஷயத்தை சொல்லி கோபத்தைஅதிகரிக்கின்றனர். ப்ரம்மதேவன் மீது கோபம் கொண்ட ஸரஸ்வதி "வேகவதி" என்ற நதியாகப் பிறளயமாக தெற்கு நோக்கி
புறப்பட்டு யாகத்தை அழிக்க வருகிறார். இதைக் ஸீமன் நாராயணன் யாகத்தை காக்க ஆதிசெஷனுடன் ஆற்றின் குறுக்கே படுத்து ஆற்றின் வேகத்தை தடுத்து நிறுத்துகிறார்.எனவே இங்கு பெருமாள் "வேக சேது" என்று அழைக்கப்படுகிறார்.

நான்முகன் திருவந்தாதி.
திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதியிலும் அரங்கனைப் பற்றி 4 பாசுரங்களை இயற்றிஉள்ளார்.

திருமழிசையாழ்வார் பற்றி சீராப்பிள்ளை அவர்களின் தனியன்.

நாராயணன் படைத்தான் நான்முகனை*
நான்முகனுக்கு ஏரார் சிவன்பிறந்தான் என்னும்சொல்*
சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே*
மொய்பூமழிசைப் பரனடியே வாழ்தது.

1 பாலில் கிடந்ததுவும்* பண்டரங்கம் மேயதுவும்*
ஆலில் துயின்றதுவும் ஆரறிவார்*
ஞாலத்து ஒரு பொருளை* வானவர் தம் மெய்ப்பொருளை
அப்பில் அருபொருளை* யானறிந்தவாறு? 2384 3

2 அவன் என்னையாளி* அரங்கத்து அரங்கில்*
அவனென்னை எய்தாமல் காப்பான்*
அவன் என்னது உள்ளத்த* நின்றான் இருந்தான் கிடக்குமே*
வெள்ளத்தரவணையின் மேல். 2411 30
3. நாகத்தணைக் குடந்தைது* வெஃகா திருஎவ்வுள்*
நாகத்தணை அரஙகம் பேரன்பில்*
நாகத்தணை பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான். 2417 36

4 ஆட்பார்த்து உழிதருவாய்*கண்டுகொள் என்று *
நின்தாள் பார்த்து உழிதருவேன்* தன்மையை*
கேட்பார்க்கு அரும்பொருளாய் நின்ற* அரஙகனே*
உன்னை விரும்புவதே* விள்ளேன் மனம். 2441

வியாழன், 20 ஜனவரி, 2011



அரங்கனைப் பற்றிப் பாடாதவர்கள் யார் ?

அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாஸனம் செய்து உள்ளார்கள்

"பதின்மர் பாடிய பெருமாள்" என்று ஸ்ரீரங்நாதனை
நமது பூர்வசார்யர்கள அழைத்து வருவார்கள்.
அப்படிப்பட்ட ஸ்ரீரங்கனைப் பற்றி பாடிய
பாசுரங்கள் 247.அந்தந்த ஆழ்வார்கள் அருளிச்செய்த
பாசுரங்களை அனுசரிக்க ஏதுவாக என்னால்
முடிந்த அளவு ஒரே இடத்தில் கொடுத்து உள்ளேன்
ஸ்வாமிதேசிகன் அவர்கள் தன்னுடைய அதிகாரஸங்க்ரஹம்
என்னும் நூலில் திருவரங்கத்தைப் பற்றி பின்வருமாறு
எழுதிஉ
ள்ளார்

ஆராத அருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்த கோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்ககு துணையாங்கோயி்ல்
சேராத பயனெல்லாஞ் சேர்ந்தகோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்கும் கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே

திருமழிசையாழ்வார

திருமழிசை என்னும் ஊரில் பார்கவ முனி என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் புத்திர பாக்யம் வேண்டி யாகம் இயற்றி, அவர் மனைவியும் கருவுற்றார். 12 மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு, முழுமையற்ற நிலையில் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு கை, கால் போன்ற உறுப்புகள் இல்லாமல் இருந்ததால், அதை ஒரு மூங்கில் புதரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பின்பு, அன்னை மகாலெட்சுமி, அய்யன் விஷ்ணுவுடன் வந்து அக்குழந்தையை எடுத்து ஆசீர்வதித்து விட்டுச் சென்றனர்.
அவர்களின் அருளால் அக்குழந்தை ஞானமும், முழு வடிவமும் பெற்றது. அவரது வலது கால் கட்டை விரலில் கூடுதலான ஒரு கண்ணும் இருக்கும். அவ்வழியே வந்த ஹரிஜன இனத்தைச் சேர்ந்த திருவாளன் என்பவர், ஸ்ரீமன் நாராயணின்
பஞ்ச ஆயுதங்களில் ஒன்றான சுதர்சன சக்கரத்தின் அம்சமான அக்குழந்தையை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அக்குழந்தையைக் கண்டவுடன் அவரது மனைவியார் பங்கயச்செல்வி மிகவும் மகிழ்ந்து, தங்களின் குழந்தையற்ற குறையை நீக்கவே இக்குழந்தை வந்தது என்று எண்ணி அக்குழந்தையை வளர்க்க முடிவு செய்தனர். அவர் துணைவியார், அக்குழந்தைக்கு பாலமுது கொடுக்க
முயன்ற போது குழந்தை, உணவு உண்ண மறுத்து விட்டது. பல நாள்கள் உணவு உ ண்ணாமல் இருந்தும் அதன் உடல்நிலை எவ்வித மாறுதலும் இன்றி, நன்றாகவே இருந்தது. இச்சம்பவம், ஊர் முழுவதும் பரவி, பலர் அக்குழந்தையைக் காண வந்து சென்றனர்.

ஒரு நாள், குழந்தை பாக்கியமற்ற, வயது முதிர்ந்த தம்பதியர் வந்து அக்குழந்தையைக் கண்டனர். அவர்கள் குழந்தைக்கு, பாலமுது கொடுத்த போது அக்குழந்தை அதை ஏற்றுக் கொண்டது. ஒருநாள், முதியவர் ஒருவரும் வந்து அக்குழந்தையைக் கண்டார். அக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஞான ஒளியைக் கண்ட அவர், இது எம்பிரான் அருள் பெற்ற, தெய்வக்குழந்தை
என்று குறிப்பிட்டு, அக்குழந்தை மிச்சம் வைக்கும் பாலை, அந்த வயது முதிர்ந்த தம்பதிகள் உண்டால் அவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும் கூறினார். அதைப் போலவே, அவர்களும் செய்து, ஒரு ஆண்மகவை ஈன்றனர். அக்குழந்தைக்கு கனி கண்ணன் என்று பெயர் சூட்டினர்.

கனி கண்ணன், வேதங்கள், சமய நூல்கள் அனைத்தும் நன்கு கற்றான். அவன் திருமழிசை ஆழ்வாரின் நெருங்கிய நண்பனாகவும், நாளடைவில் அவரையே குருவாகவும் ஏற்றுக்கொண்டான்.

பேயாழ்வார், திருமழிசையாழ்வாருக்கு, பக்தி சாரர் என்னும் திருப்பெயரிட்டு அழைத்தார்.அதன்பின், திருமழிசையாழ்வார் பல திருத்தலங்களுக்குச் சென்று ஆனந்தக்கண்ணனைக் கண்ணார தரிசித்து, திருவேக்கா என்னும் ஊரை வந்து அடைந்தார்.யதோத்தகாரி சன்னதியில் தியான நிலையில் இருந்தார்.
அங்கு, அவருக்குப் பொறுப்பாக அனைத்துப் பணிவிடைகளும் செய்த ஒரு மூதாட்டியின் அன்பிற்கு மெச்சி, அவருக்கு ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். அதைக்கேட்ட அம்மூதாட்டி, தனக்கு இந்த வயோதிகத் தோற்றம் பிடிக்கவில்லை என்றும், தான் என்றும் இளமை மாறாத அழகிய இளம்பெண்ணாக இருக்க வரம் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். அவர் வேண்டுதலைக் கேட்ட ஆழ்வாரும் அவ்வாறே அருளினார். ஒருநாள் நகர்வலம் வந்த பல்லவ மன்னன், அவ்விளம் பெண்ணைக் கண்டு, அவள் அழகில் மயங்கி, அவளையே மணந்தான்.
ஆண்டுகள் பல கழிந்தன. மன்னனுக்கு மூப்பு நிலை வரத்துவங்கியது. ஆனாலும், அவன் மனைவி, அதே இளமை மாறா அழகுடன் இருந்தாள். இதைக்கண்டு அதிசயித்த பல்லவ மன்னன், அவளின் இளமையின் இரகசியத்தைக் கேட்டான். அவளும், திருமழிசையாழ்வாரின் பெருமையை எடுத்துக் கூறினாள்.

மறுநாள், மன்னன் தன் சேவகர்களை அனுப்பி திருமழிசையாழ்வாரை அழைத்து வரச்சொன்னார். அவர் வர மறுத்து விட்டார். மீண்டும், ஆட்களை அனுப்பினார். கனிகண்ணன், அங்கு சென்றார்.மன்னன், கனி கண்ணனிடம், 'என்னைப் புகழ்ந்து உன் குரு பாட வேண்டும்', என்று கூறினார்.ஆனால், கனி கண்ணனோ, 'எம் குருநாதர் எம்பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் பாட மாட்டார்', என்று கூறினார்.சரி போனால் போகட்டும் விடு நீயாவது என்னைப் பற்றி பாடு என்று மன்னன் கனிகண்ணனிடம் ஆணையிட்டார்.
ஆனால் கனிகண்ணனோ பாட மறுத்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், அவரை அந்த ஊரில் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.
கனிகண்ணன் விரைந்து திருமழிசையாழ்வாரிடம் வந்து, அரண்மனையில் நடந்தவற்றை ஒன்று விடாமல் கூறி, தான் திருவேக்காவை விட்டுப் புறப்படுவதாகவும். அதற்காகத் தன்னை மன்னித்து ஆசி அருள வேண்டும் என்று வேண்டினார், கனிகண்ணனார். திருமழிசையாழ்வார் தானும் உடன் வருவதாக கனி கண்ணனிடம் கூறி, உடன் புறப்பட்டார். புறப்படும் வேளையில், காஞ்சியில் வீற்றிருந்த எம்பெருமானை உடன் வருமாறு ஆணையிட்டார், ஆழ்வார்

"கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்"

என்று பாடினார் திருமழிசையாழ்வார்.

அவர் சொன்னவுடன், எம் பெருமானும் அவர்களுடன் புறப்பட்டுப் போய்விட்டார். கமலக்கண்ணன் ஊரை விட்டுச் சென்றதால், காஞ்சி மாநகரம் தன் பொலிவை எல்லாம் இழந்து, ஒரே நாளில் நலிவுற்றுவிட்டது. மறுநாள் காலை, பணியாளன் ஒருவன் விரைந்து வந்து மன்னனிடம் நடந்தவற்றை எல்லாம் கூறினான். அனைத்தையும் அறிந்த மன்னன், தன் தவற்றை உணர்ந்து அவர்களைத் தேடிச் சென்று, அவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர்களை மீண்டும் காஞ்சிக்கு வர வேண்டினான்.
அவர்களும், மன்னன் கூற்றுக்கு இசைந்து, காஞ்சிபுரம் செல்ல முடிவு செய்தனர். இப்பொழுது,

"கனிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங் காஞ்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்;
நீயும் உன்றன் பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"

என்று ஆழ்வார் கூற, மீண்டும் ஸ்ரீநிவாசன், காஞ்சியில் வாசம் செய்யத் துவங்கினான்.
நம்ம கனிகண்ணன், கமலக்கண்ணன், திருமழிசையாழ்வார் மூணு பேரும் ஓர் இரவு ஒரு இடத்துல தங்கியிருந்த இடம்தான் 'ஓர் இரவு இருக்கை' அப்படின்னு அழைக்கப்படுகிறது. அந்தப் பெயர் மருவி தற்காலத்தில், 'ஓரிக்கை' ன்னு சொல்றாங்க.
அதன் பிறகு, சிறிது காலம் கழித்து திருமழிசையாழ்வாரும், கனிகண்ணனும் திருக்குடந்தை நோக்கிப் பயணித்தனர். அங்கே காவிரியாற்றில் அவர் பாடிய பாடல்களை இட்ட போது அனைத்தையும் காவிரித்தாய் எடுத்துக் கொண்டு திருச்சந்த விருத்தம் (120 பாசுரம்) மற்றும் நாண்முகன் திருவந்தாதி (90 பாசுரம்) ஆகிய இரண்டை மட்டும், திருமழிசையாழ்வாரின் பொற்பாதத்தில்
சேர்ப்பித்தாள். அவர் அவற்றை எடுத்துக் கொண்டு ஆரவமுதப் பெருமாளிடத்தில் வந்து சேர்ந்தார். பின், திருக்குடந்தையிலேயே தங்கி எம்பெருமான் பெயரில் மங்களசாசனம் பாடினார்.

திருச்சந்த விருத்தத்தில் அவர் கூறுவது:

நின்றது எந்தை ஊரகத்துஇருந்தது எந்தை பாடகத்து
அன்று வாக்கனைக் கிடந்துஎண்ணிலாத முன்னெல்லாம்
அன்று நான் பிறந்திலேன்;பிறந்த பின் மற்ந்திலேன்
நின்றதும் இருந்ததும்கிடந்ததும் என்னெஞ்சினுள்ளே!

நீ வெவ்வேறு ஊர்களில், நின்று, இருந்து, கிடந்து என்னும் வெவ்வேறு கோலங்களில், கணக்கில்லாத யுகங்களாய் அருள்

புரிந்துக் கொண்டிருக்கின்றாய்! அப்பொழுதெல்லாம், நான் பிறக்கவேயில்லை. நான் பிறந்த பின்பு உன்னை ஒருகாலத்திலும் மறந்ததேயில்லை. நான் இருக்கின்ற இக்காலத்தில், நீ நின்றது, இருந்தது, கிடந்தது எல்லாம் என் இதயத்தாமரைக்குள்ளேயன்றி வேறெங்குமில்லை! என்று பாடி பரவசமடைகிறார், திருமழிசையாழ்வார்.

திருகச்சநம்பிகள் திருமழிசையாழ்வார் பற்றி இயற்றிய தனியன்கள்.

தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும் ,
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே.

உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து * தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க,-உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் ,* மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது.

திருமழிசையாழ்வார் திருவரங்கனைப் பற்றி பாடிய பாடல்கள் இவை.

1. அரங்கனே! தரங்கநீர்* கலங்க அன்று குன்று சூழ் *
மரங்கள் தேய மாநிலம் குலுங்க* மாசுணம் சுலாய் *
நெருங்கநீ கடைந்தபோது,* நின்ற சூரர் என்செய்தார்?*
குரங்கை ஆளுகந்த எந்தை !* கூறுதேற வேறிதே.* 21.

2.கொண்டை கொண்ட கோதைமீது* தேனுலாவு கூனிகூன்*
உண்டை கொண்ட அரங்கவோட்டி * உள் மகிழ்ந்த நாதனூர்
நண்டையுண்டு நாரை பேர* வாளை பேய நீலமே,*
அணடை கொண்டு கெண்டைமேயும்* அநதணீர் அரங்கமே. 49

3.வெண்திரைக் கருங்கடல்* சிவந்து வேவ முன்னோர்நாள்*
திண்திறல் சிலக்கை வாளிவிட்டவீரர் சேருமுர்*
எண் திசைக் கணங்களும்* இறைஞ்சி ஆடு தீரத்த நீர்,*
வண்டு இரைத்த சோலை வேலி* மன்னுசீர் அரங்கமே . 50

4.சரங்களைத் துரந்த* வில் வளைத்து இலங்கை மன்னவன்,*
சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த* செல்வர் மன்னு பொன்னிடம் ,*
பரந்து பொன்நிறந்து நுந்தி* வந்து அலைக்கும் வார்புனல்,*
அரங்கமெனபர் நான்முகத்து *அயன்பணிந்த கோயிலே. 51

5.பொற்றை உற்ற முற்றல் யானை* போர் எதிர்த்து வந்ததை*
பற்றி உற்று மற்றதன்* மருப்பொசித்த பாகனூர்,*
சிற்று எயிற்றுமுற்றல்மூங்கில்* மூன்று தண்டர் ஒன்றினர் ,*
அற்ற பற்றர் சுற்றி வாழும்* அந்தணீர் அரங்கமே. 52

6.மோடியோடு இலச்சையாய* சாபம் எய்தி முககணான் ,*
கூடு சேனை மக்களோடு* கொண்டு மண்டி வெஞ்சமத்து -
ஓட* வாணண் ஆயிரம்* கரங்கழித்த ஆதிமால் ,*
பீடுகோயில் கூடுநீர்* அரங்கமென்ற பேர் அதே. 53

7.இலைத் தலை சரந்துரந்து* இலங்கை கட்டழித்தவன் ,*
மலைத் தலைப் பிறந்து இழிந்து* வந்து நுந்து சந்தனம்,*
குலைத்து அலைத்து இறுத்து எறிந்த* குங்குமக் குழம்பினோடு,*
அலைத்தொழுகு காவிரி* அரங்கமேய அண்ணலே. 54

8.மன்னு மாமலர் கிழத்தி* வைய மங்கை மைந்தனாய்,*
பின்னும் ஆயர் பின்னைதோள்* மணம் புணர்ந்தது அன்றியும்,
உன்ன பாதம் என்ன சிந்தை* மன்ன வைத்து நல்கினாய்,*
பொன்னி சூழ் அரங்கமேய* புண்டரீகன் அல்லையே? 55

9.சுரும்பு அரங்கு தண்துழாய்* துதைந்து அலர்ந்த பாதமே,*
விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு* இரங்கு அரங்க வாணனே,*
கரும்பிருந்த கட்டியே* கடல்கிடந்த கண்ணனே,*
இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த* வில்லி இராமனே! 93

10.பொன்னிசூழ் அரங்கமேய * பூவைவண்ண! மாய! கேள்,*
என்னதாவி என்னும்* வல் வினையின் உள் கொழுந்து எழுந்து,*
உள்ளபாதம் என்ன நின்ற* ஒண்சுடர்க் கொழுமலர் ,*
மன்ன வந்து பூண்டு* வாட்டமின்றி எங்கும் நின்றதே. 119