சனி, 20 ஜூலை, 2013

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-18. அரங்கனுக்கு பூதத்தாழ்வாரின் அர்ப்பணம்.



ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-18. அரங்கனுக்கு பூதத்தாழ்வாரின் அர்ப்பணம்.


பெருமான் ஐந்து நிலைகள் கொண்டவனாம். என்ன நிலைகள்?  ,
விண்மீது இருப்பாய், என்று வைகுந்த நிலை, மலை மேல் இருப்பாய் 
என்பது அர்ச்சை நிலை, திருபாற்கடல் ஒரு நிலை, மண்மீது உழல்வாய் 
என்று அவதாரங்கள் நிலை, இவற்றுள் எங்கும் மறைந்து உழல்வாய் 
என்ற அந்தர்யாமி நிலை. இந்த ஐந்து நிலைகளில்  எளிமையான் 
நிலை அர்ச்சாவதாரம் என்ற அர்ச்சை நிலை. 
என்னன்னு கேட்கிறிங்களா?
பாருங்க, வைகுந்த பெருமானைப் போய் உடனே பார்த்துவிட்டு 
வரமுடியுமா? யாரை வேணா கேளுங்க,108 திவ்ய தேசத்தை பார்த்தாச்சா, 
அப்படின்னு?
வைகுந்தம், திருபாற்கடல் இவற்றைப் பார்த்தாச்சா?-ன்னு கேளுங்க. 
என்ன பதில் வரும்?
வராது!!!
வைகுந்தம் போய் விட்டு வந்து
   "நாம் வைகுந்தம் போய்விட்டு வைத்தேன், நீங்க பார்த்தாச்சா?"
என்று சொல்ல முயுமா? அதுசரி, திருபாற்கடலைப் போய், 
பெருமாளைப் பார்த்துவிட்டு  பாற்கடலில் நீந்திவிட்டு வந்தேன்னு 
சொன்னா யார் நம்புவாங்க.
அந்த இரு நிலைகளும் இந்த உடலோடு போய் பார்க்க முடியாதுன்னு
எல்லாருக்கும் தெரியும். அதுசரிய்யா ராமன், கண்ணன், போன்ற 
அவதாரங்களை பார்த்தேன்னு சொன்ன, நாம என்ன கேட்போம்,
"என்ன சினிமா பார்த்தியா?"
அப்படின்னு தானே கேட்கத் தோன்றும். இல்லையா பின்னே? 
அவதாரங்கள் எல்லாம்  நம்ம காலத்திலேயா நடந்தது? காலத்தால் 
போகமுடியாத நிலைகள் அவை.  என்ன, அவதாரங்கள் நடந்த 
இடமான அயோத்தி, மதுரா, துவாரகா போன்ற  இடங்களைப் 
போய் பார்த்து அனுபவித்து விட்டு வந்து மகிழலாம்.
"நான் பெருமானை நேத்தி ஏன் கனவுல வந்தார்" என்றும், 
நமக்குள்ளே உள்ளார் என்று சொல்லமுடியுமா? ஆழ்வார்கள் 
எல்லாம் தான் ஏன் மனதுக்குள் பெருமான்  வந்தார் என்று 
சொல்ல முடியுமே தவிர, நம்மைப் போல் உள்ளவர்கள், ஏழைகள்
"இன்னிக்கு என்ன சமையல் பண்ணே? என்ன நகை வாங்கினே?" 
என்று சொல்ல முடியுமே தவிர பெருமாள் நமக்குள்ளே உள்ளார் 
என்று சொன்னால் யாரும் நம்பாட்டார்கள்.
இப்படி பெருமானின் ஐந்து நிலைகளில், நான்கு நிலைகள் நம்மால் 
நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலைகள்.
அப்ப ஜந்தாவதான நிலை அர்ச்சாவதார நிலை தான் நமக்கு ஏத்த நிலை.
திருமங்கைஆழ்வார் சொல்றாராம், ஜீவன் இந்த உடலோட 
வைகுந்தத்துக்கு போகமுடியாதாம், அது இந்த நாட்டிலேயே 
இல்லை, போனா திரும்பி வரமுடியாதாம்,
இப்படி இருக்கும் போது தரையில் கிடக்கும் முயல் 
மாமிசத்தை விட்டு, ஆகாயத்திலே போற காக்கை மாமிசத்துக்க்கு 
ஆசைப் படுவது போல இருக்குன்னு சொல்றார். முயல் மாமிசம் என்பது
அர்ச்சையாம், காக்கை மாமிசம் என்பது வைகுந்தமாம்.
அப்படி பெருமை கொண்டது அர்ச்சாவதாரம் என்கிற விக்கிரஹ 
ருபத்தில் நிலை.
ராமானுஜர் தன்னுடைய காலக்‌ஷேபத்தில் சொல்வதை வேளுக்குடி ஸ்வாமிகள்
சொல்றார்,
”அவன் இவன் என்று கூழேன்மின் நெஞ்சினால் நினைப்பான் எவன் அவனாகும்  நீள் கடல் வண்ணனே”
அதாவது “அவன்”னான, வைகுந்த நாதனும் “இவன்”னான் அர்ச்சாவதாரமான பெருமாளும்
ஒன்று என நினைக்காதீர், அவனுக்கு இருக்கும் பெருமை இவனுக்கு உண்டா என்று கேட்பது போலத் தோன்றும், அப்படியில்லை,
“அவன்”னுக்குக் கொடுக்கும் ஸ்வரத்தை கொஞசம் குறைத்துக் கொண்டு, “இவன்”னுக்குக் கொடுக்கும் ஸ்வரத்தை கூட்டி பின் அர்த்தத்தைப் பாருங்கள் என்கிறாறாம்.
“அவன்” என்ற வைகுந்த நாதன் என்ன பெரியவனா, அவனை நாம் எப்போது பார்க்கப்  போகிறோம், இல்லை “அவனை”ப் பார்த்துவிட்டு வந்து ஏதாவது உபன்யாசம் பண்ண  முடியுமா, “அவனை”ப் பார்த்தேன்னு யாருக்கிட்டயாவது பீத்திக்க முடியுமா?
இப்படி ஒண்ணுமே செய்ய முடியாத “அவன்” பெரியவனா, இல்ல,
“இவன்”னான அர்ச்சாவதார அரஙகனாதனை என்ன்ன்ன நாம நினைக்கிறோமோ அந்தந்த விதத்தில் அலங்காரம் செய்து பார்க்ககூடிய “இவன்” பெரியவனா என்று பார்த்தால், “இவன்”தான் பெரியவன் என்று ராமானுஜர் தன்னுடைய உபன்யாசத்தில் சொல்வாராம்.
இப்படி அர்ச்சாவதாரத்துக்கு ஒரு தனிப் பெருமை உண்டு.
அதிலும் அரங்கனுக்குத் தனிப் பெருமை.
அரங்கனுக்கு பதின்மர் பாடும் பெருமாள் என்று பெயர். ஆம், எல்லா ஆழ்வார்களும் அவருக்கு பாசுரம் பாடியுள்ளார்கள். மொத்தம் 247 பாசுரங்கள்.  மற்ற எல்லா திவ்யதேசப்பெருமானுக்கும் இல்லாத இந்தச்சிறப்பு, அரங்கனுக்கு மட்டுமே உண்டு.
முந்தைய பகுதியில் பேயாழ்வார் அரங்கனுக்கு அர்ப்பணம் செய்த பாசுரத்தைப் பார்த்தோம்.  
பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் நூறு பாசுரங்கள் பாடியுள்ளார்.
அதில் 4 பாசுரங்கள், அதாவது, 28, 46, 70 மற்றும் 88 வது
பாசுரங்கள் அரங்கனுக்கு என அமைந்தவை
மேற்சொன்ன ஐந்து நிலைகளையும் திருவங்கத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.
பஞ்சப் பிரகாரமும் ஸ்ரீரங்கத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
அதாவது வைகுண்ட நாதனே அரங்கன், திருப்பாற்கடல் நாதனே அரங்கன்,
விபவ வாசுதேவனே அரங்கன், நான்காவது நிலை அந்தர்யாமியே அரங்கன்,
மற்றும் அர்ச்சாவதார திருவேங்கடநாதனே அரங்கன் என்று ஐந்து நிலையையும் அரங்கனுக்கு சமர்ப்பிக்கிறார் பூதத்தாழ்வார்.
இந்தப் பாசுரத்தில் வைகுந்தம்,திருப்பாற்கடல்,விபவாதாரம்,அந்தர்யாமி, மற்றும் அர்ச்சாவாதரம் என்ற நிலைகளை எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு இடத்தை ஒப்பிடுகிறார். இதில் திருவேஙகடத்தை அர்ச்சாவதார நிலைக்கு திருவரங்கத்துக்கு ஒப்பிடுகிறார். மேலும் அரங்கம் “நினைப்பரிய நீள் அரங்கம்”, என்று பெரிய அரங்கம், நினைக்கமுடியாது அளவு என்று கூறுகிறார்.
ஆமாம், திருவரங்கம் கோயில் மிகக் பெரியது தான்.  6,79,0000 சதுர அடி, 156 ஏக்கர் பரப்பளவு, சுற்றளவு 4km,   7 பிரகாரங்கள் கொண்ட, ஆசியாவிலேயே மிகப் பெரிய கோபுரம் 236 அடி உயரம் கொண்டது மொத்த கோபுரங்கள் 21 கொண்டது உலத்திலேயே இது ஒன்றுதான். 2700 அடி வடக்கு தெற்காக , 2200 அடி கிழக்கு மேற்காக மிக  நீளமாக உள்ளது திருவரங்கம் என்றால் பார்த்துக்கொள்ளூங்கள்!!
இதில் எல்லா ஆழ்வார்களுக்கும் சன்னிதி உள்ளது. எல்லா பெருமாளுக்கும், அதாவது ராமருக்கு, கிருஷ்ணருக்கு,
பார்த்தசாரதிக்கு, உடையவருக்கு என்று எல்லாருக்கும் சன்னிதி உண்டு. 40 சன்னிதிகள் உண்டு. இங்கு உள்ள கருடன்  மிகப் பெரிய கருடன்.
ஏகப்பட்ட உப சன்னிதிகளுடன் கொண்ட ஒரே கோயில் இது தான் என்றால் அது மிகையாகாது.
அதன் விஸ்தீரணத்தைக் காட்டும் வரைபடத்தை கொடுத்துள்ளேன், நீங்களே பார்த்துக்கொள்ளூங்கள் ஸீரங்கம் எவ்வளவு
பெரிய கோயில் என்று!!!!!
பூதத்தாழ்வார் இந்தப் பாசுரத்தின் மூலம் மற்றொன்றையும் சொல்கிறார். அதாவது ‘ம்னம்” என்பது ஒரு திவ்ய்தேசம் எனக் கொள்ளலாம். ஆம், மனத்தை ஒரு திவ்யதேசமாக கொள்வதை விட்டு வேறு இடத்தை ஏன் தேடுகிறாய்? என்று சொல்லாமல் சொல்கிறார்.
108 திவ்யதேசத்தையும் மனத்திலேயே கொண்டு வாருங்கள், அப்புறம் எதற்கு மற்ற எல்லா இடத்திலேயும் அவனைத் தேடுகிறாய் என்றும் கொள்ளலாம்.
வைகுந்த நாதனுக்கு ‘தேவாதிதேவன் எனப்படுவான்”, ”மாவாய் பிளந்த மகன்” என்பதன் மூலம் விபவாதாரத்துக்கு  

உதாரணம் சொல்கிறார். அதாவது கேசி என்கிற குதிரையை அடக்கிய கிருஷ்ணாவதாரத்தை சொல்கிறார்.
எல்லா திவ்யதேசங்களையும் என்னுடைய மனத்தில் மகாலயமாக வைத்துள்ளேன், மற்ற எல்லா இடத்திலும் பாலாயமாக
உள்ளது என்று தன் மனத்தைக் கூறுகிறார்.
அந்த பாசுரம்.

      மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
  நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
      தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
  மாவாய் பிளந்த மகன்.                                                        28

உ.வே.வேளுக்குடி ஸீகிருஷ்ணன் ஸ்வாமிகள் ஸீரங்க மஹாத்மியம்  உபன்யாசத்தில் இருந்து 

எடுக்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை: