திங்கள், 12 மார்ச், 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-4.


ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-4.

"ஏன் ஸ்வாமி வருத்தமாக உள்ளீர்? நானும் இரண்டு நாளாகப் பார்க்கிறேன்,எதேயோ  பறிகொடுத்தமாதிரி உள்ளிர்கள்?"
தாயார் வைகுந்தத்தில் ஸ்ரீமன் நாராயணனைப் பார்த்துக் கேட்கிறார்.
"நேற்றைக்கு பூலோகம் சென்று இருந்தேன், அங்கு தீபாவளி சமயம். ஒரு வீட்டில்  நடந்த சம்பவம் என்னை பாதிtத் து விட்டது, அதனை நினைத்துத் தான் வருத்தமாக  உள்ளேன்" என்று நாராயணன் லட்சுமியைப் பார்த்துச் சொன்னார்.
"அப்படி என்ன அங்கு நடந்து விட்டது, நானும் தெரிந்து கொள்ளக்கூடாதா ஸ்வாமி?"
"தாராளமாகத் தெரிந்து கொள்".
"கேள்"
பூலோகத்தில் ஒருநாள்:
"ஏன் அம்மா, வருத்தமாக இருக்கே? எல்லாச் சாமான்களும் தான் தீபாவளிக்கு வாங்கி  போட்டுட்டேனே? இன்னும் ஏதாவது வேண்டுமானால் சொல்லு, அதையும் வாங்கிண்டு  வரேன்."
மூத்த பையன் தான் தாயிடம், அவள் வருத்தமாக இருப்பதைப் பார்த்து, வினவினான். தாய்க்கு மூன்று மகன்கள், இருவர் அவளோடு உள்ளார்கள், மூன்றாவது மகனுக்கு  கல்யாணமாகி அவன் தன் மனைவியுடன் அமெரிக்காவில் தற்போதுதான் சென்றுள்ளான், மூத்த மகன் கேட்டவுடன், "இப்போது வரதராஜன் என்ன செய்யரானோ? அவனுக்கு  தீபாவளின்னு தெரியுமோ இல்லையோ? அவன் மனைவிக்கு பட்சணம் எல்லாம் செய்யத்
தெரியுமோ தெரியாதோ? அவனும் நம்மோடு இருந்திருந்தால் நன்னா இருந்து இருக்கும். ஹும், அவனும் நம்மோடு இல்லையேன்னு தான் வருத்தமாக இருக்கு" என்றாள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்ற மருமகள்கள்,
"குத்துக்கல்லாட்டம் நாம ரெண்டு பேர் இங்க இருக்கோம், நம்மளைப் பத்திக் கவலைபடாம, அம்மா இருக்காளா, இல்லையான்னு இதுநாள் வரை கவலைப் படாத வரதராஜனையும்  அவன் பெண்டாட்டியைப் பத்தி கவலைப்படுதே இந்தக் கிழம்" ன்னு  அந்த இரண்டு மருமகள்களும் மாமியாருக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள், 
அதே நினைச்சேன், நாம அப்படி கவலைபடாம இருக்கோமேன்னு வருத்தமாக இருக்கு"  பூலோகத்தில் நடந்த, பார்த்த கதையை லட்சுமியிடம் விவரித்தார்,  நாராயணன்.
"அதற்கும் நீங்கள் வருத்தப் படுவதற்கும் என்ன ஸ்வாமி உள்ளது?'
லக்ஷ்மி ஒண்ணும் புரியாமல் வினவினாள்.
"என்ன அப்படிச் சொல்லிட்ட?  நாம் வைகுந்த்தத்தில் சௌக்கியமா இருக்கோம்,  பூலோகத்தில் எத்தனை பேர் கஷ்டப் படறாங்க? அவங்களும் வைகுந்தத்திற்கு வர  வேண்டாமா? அவர்களும் நம்மோடு இருந்தால், அந்தத் தாயாரைப் போல நாமும்  மகிழ்ச்சியாக இருக்கலாமே? அதுக்குத் தான் வருத்தப் பட்டேன்" ன்னு நாராயணன்
லட்சுமியிடம் தான் வருத்தத்தை கொட்டினான்.
"நீங்க சொல்றது சரிதான். அதுக்கு இப்ப என்ன செய்ய உத்தேசம்?"
"நாம பூலோகத்துக்கு போயிட்டா?"  நாராயணன் பதில் சொன்னான்.
"நாம பூலோகத்துலே எந்த இடத்துக்கு போவது?"
"தொண்டரடிப்பொடி ஆழ்வார் மூணாவது விபுதி வேணும்ன்னு சொன்னாரில்லே, அந்தத் திருவரங்கம் போயிடுவோம், அங்கிருந்து கொண்டு எல்லோரையும் திருத்தி  வைகுந்தம் அனுப்பிடுவோம். திருமங்கை ஆழ்வார் அர்ச்சாவதாரம் பற்றி நிறையப்  பாடியுள்ளார், அதனாலே 106 திவ்ய தேசங்கள் தோறும் இருந்து பக்தர்களைத்  திருத்தி வைகுந்தம் அனுப்பிடுவோம். "வைகுந்தம் புகுவது மன்னவர் விதி?"
அதனால் எல்லோரையும் திருத்தி இங்கு அனுப்பிடுவோம். கிளம்ப தயாராக இரு"
என்று நாராயணன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தான்.
ஆக ஸ்ரீரங்கம் மூணாவது விபுதி ஆனது. ஆயிரங்கால் மண்டபம்
ஆயிரங்கால் மண்டபம் மற்றொரு பகுதி
அதுக்கு ஏற்றாற்போல் ஸ்ரீரங்கத்தில் ஆயிரம் கால் மண்டபத்தில் நித்ய விபுதி, லீலா விபுதி  மாதிரி, வைகுந்த ஏகாதசியின் போது உண்டாக்குகிறார்கள். ஆயிரக்கால் மண்டபத்தில்,  953 கல் தூண்கள்( ஒவ்வொன்றும் 19 அடி உயரம் கொண்டவை) திருமாமணி மண்டபத்தைச் சுற்றி நித்ய விபுதியாகவும், ஒவ்வொரு ஆண்டும் 47 மரத்தூண்கள் ( ஆக மொத்தம்  1000 தூண்கள்) வெளியே போடற கொட்டகை லீலா விபுதி எனவும் மாறுகிறது.
திருமாமணி மண்டபத்தில் ராபத்து உத்சவத்தின் போது  அரையர் பண் இசைத்து பாடி  வைகுந்தத்தில் உள்ளது போல நடைபெறுகிறது.
என்ன, ஸ்ரீரங்கம் வைகுந்தம் இல்லையா?
உடனே புறப்படுங்கள் வைகுந்தத்திற்கு!!!
ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து திரட்டியவை


கருத்துகள் இல்லை: