சனி, 17 மார்ச், 2012

ஸ்ரீரங்கம் பகுதி-5

ஸ்ரீரங்கம் பகுதி-5

IP02-5648
முற்கலன், பூலோக வாழ்வு முடிந்த படியால் அவனை இழுத்து வந்து நரகத்தின் வாசலில்
நிறுத்துகின்றனர். நரகத்தின் உள்ளிருந்து எமன் (நமன்) வெளியே வந்து
"ஏன்யா, இப்படி வந்து நிற்கிறாய்?

நீ ஒருதடவையாவது கடவுள் நாமத்தை சொல்லாமல் என்ன செய்தாய்? கடவுள் நாமத்தைச் சொல்வதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும்
தெரியுமா?
"சஹஸ்ரநாமம் என பகவானின் நாமங்கள் ஆயிரம் உள்ளதே? அதில் ஒரு நாமத்தையாவது
சொல்லி இருக்கலாமே?
                "ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே!
              சஹஸ்ரநாம தத் துல்யம் ராமநாம வராநநே!!"
என்று ராம நாமம் கூடவா உனக்குத் தெரியாது? என்று கடவுள் நாமத்தின் மகிமையைப் பற்றி முற்கலனுக்கு விளக்கிச் சொல்லிக்
கொண்டிருந்தான் எமன்."
"ரங்கா" என்று ஒருதடவை சொல்லி இருந்தால் நரகத்திற்கு வந்திருக்க வேண்டாமே?
         "அறிவிலா மனிதர் எல்லாம்* அரங்கமென்று

                  அழைப்பராகில்*
            பொறியில்வாழ் நரகம் எல்லாம்* புல்லெழுந்து

                  ஒழியுமன்றோ?"
அறிவு இல்லாத மனிதன் கூட ஓரு தடவை "அரங்கா" என்று அழைத்தால் நரகம் எல்லாம் புல் முளைத்துப் போயிருக்கும்.  எனக்கு வேலை இருந்திருக்காதே ஐயா! இது மட்டுமா
"அரங்கா" என்று சொல்லாத உனக்கு, இடும் சோற்றை நாய்க்கு இடுங்கள், அது கூட
நன்றியோடு இருந்திருக்கும் ஐயா!"
   "               அணி திருவரங்கம் என்னா*
       மிண்டர் பாய்ந்து உண்ணும சோற்றை* விலக்கி நாய்க்கு இடுமினீரே!"
"உங்களுக்காகத் தானே தொண்டரடிப்பொடிஆழ்வார், போன்ற ஆழ்வார்கள் எல்லாம்,
சொல்லி இருக்கிறார்கள். நீ ஒரு தடவை கூட சொல்லவில்லை போலிருக்கு"
என்று எமன் முற்கலனிடம் நாமத்தின் மகிமையை விளக்கிச் சொல்லி விட்டு தன் வேலையாளிடம்,
"இவனை நரகத்துக்கு இழுத்துப் போங்கள்"
என்று ஆணை இட்டுவிட்டு தான் இருப்பிடத்தை நோக்கி நகருகிறான்.
நரகத்தைக் காணோம்!
உள்ளே செல்ல முற்படும், எமனை காவலாளி தடுத்து
"உங்களுக்கு வேலையில்லை, நரகம் எல்லாம் சொர்க்கமாகிவிட்டது ஐயா"
"என்னப்பாசொல்கிறாய்?" என்று எமன் கேட்க,
"ஆம் ஐயா, நாமத்தின் மேன்மையை நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இங்கு அதனைக்
கேட்டுக்கொண்டிருந்த எல்லாரும் சொர்க்கத்துக்குப் போய் விட்டார்கள்,  நரகம் இல்லாமல்
போய்விட்டது ஐயா!" என்று காவலாளி சொன்னான்.
"நமனும் முற்கலனும் பேச* நரகில் நின்றார்கள் கேட்க*
நரகமே சொர்க்கமாகும்* நாமங்கள் உடைய நம்பி*"

அப்படிப்பட்டது அரங்கனின் நாமம். நாமத்துக்கே  அப்படின்னா, அந்த ஊருக்கு எப்படி
இருக்கும்.
இது மட்டுமா?
"உன் கடைசி ஆசை என்ன?" ன்னு
வயதானவர்களைக் கேட்டுப் பாருங்கள்,
"கடைசிக் காலத்திலே என்னைக் கொண்டு போய் பாடுவான்துறையிலே சேத்துடுங்கப்பா" என்பார்கள்.
அதென்ன பாடுவாந்துரைங்கிங்களா?

Photo0182நன்றி: கிஞ்சித்காரம் டிரஸ்ட் 2012ஆண்டு நாட்காட்டி

திருமங்கை மன்னன் படித்துறை, கொள்ளிடத்தின்
கரையில் உள்ளது.
இது திருமங்கை ஆழ்வார் பற்றியது.
திருமங்கை மன்னன் அரங்கனால் ஆட்கொள்ளப்பட்டபின், அவனுக்காக பல இடங்களிலும்
பொன், பொருள் இவற்றைத் திருடி, திருவரங்கத்தின் திருமதிளைக் கட்டினான். ஸ்ரீரங்கத்தில் இவர்
பெயரில் "ஆலீ நாடன் திருச்சுற்று" ஒரு திருச்சுற்று உள்ளது.
மதில் கட்டுவதற்கு உதவிய கம்மாளர்களுக்கு பாக்கி கொடுக்க முடியாமல், படகில் ஏற்றி
ஆற்றில் தள்ளினார்.
பெருமானின் அருளால், எதிர்த்து வந்த அவர்களின் பேரன்களை, காவேரி நீராழி மண்டபத்தில்
நின்று கொண்டு, இறந்து போனவர்களை அழைக்கச் சொன்னார்.  பித்ருக்கள் அனைவரும்
பெருமாளோடு அங்கு தோன்றி
"நாங்கள் ஆழ்வார் அருளோடு பெருமாளோடு சுகமாக  இருக்கிறோம் நீங்களும்
ஆழ்வாரையே தஞ்சமாக பற்றி இருங்கள்"
என்று கூறினர்.
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை பார்த்து
" உம் விருப்பத்தைக் கேளும்" என வினவ
ஆழ்வார்,
      "தங்கள் தசாவதாரங்களை காண்பிக்கவேண்டும்"
என்றார். மேலும் "என்ன விருப்பம்?" என பெருமான் கேட்க,
"நம் பக்தர்களுக்கு உயர் கதி அளிக்கவேண்டும்', என ஆழ்வார் கேட்க,
"உம் வாளை வேகமாக வீசும், அது எங்கு விழுகிறதோ அங்கு இறுதிச் சடங்குகளை
செய்பவர்களுக்கு உயர்கதி அளிப்போம்",
என்றான் அரங்கன்.
ஆழ்வார் தான் வாளை வேகமாக வீச, அது வடதிருக்காவிரியின் கரையில் விழ, அங்கு
"பாடிய வாளன் துறை" என்ற பெயரோடு இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடமாயிற்று.
அதைத் தான் "பாடுவாந்துரை, பாடுவந்துறை" என்று சொல்லுகிறார்கள்.
அப்படி பாடுவாந்துரையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றால் முக்தி நிச்சயம்.
அதற்காகவவாது ஸ்ரீரங்கத்தில் இறக்க வேண்டும் என்று பலரும் விருப்பப்படுவார்கள்
ஆக ஸ்ரீரங்கத்தில் இருந்தாலும் சொர்க்கம், மறைந்த பின்னும் சொர்க்கம்.
அதனால் தான் ஸ்ரீரங்கத்தை பூலோக சொர்க்கம் Photo0181என்கிறார்களோ?

நன்றி: கிஞ்சித்காரம் டிரஸ்ட் 2012ஆண்டு நாட்காட்டி

ஸ்ரீ..உ.வே. வேளுக்குடி ஸ்வாமிகள் உபன்யாசத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: