புதன், 16 மே, 2012

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-10. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-10. அரங்கனைப் ஆராதித்த ஆழ்வார்கள்!!

குலசேகரஆழ்வார்பிறந்தஊர்
பாம்புக் குடத்தில் கை இட்டவர்.
ஏன் பாம்புக் குடத்தில் கை இடவேண்டும்?
ஏதாவது வேண்டுதலா?அதுக்குன்னு ஒரு பாட்டா?ஆமாங்க! பாம்புக் குடத்தில் கை இட்டும் அவரைப் பாம்பு கடிக்கவில்லைன்னா
பாருங்க!!
வேண்டுதல்லாம் இல்லங்க!! தான் தப்பு செய்துட்டோமோன்னு தன்னைத்தானே வருத்திக்கொள்ள இந்த மாதிரி செய்துட்டவர்.
இப்படியெல்லாம் கூட மக்கள் இந்தக காலத்தில் உண்டா? அப்படின்னு நீங்க
கேட்கறது காதுலே விழுது.
இதெல்லாம் நடந்தது இன்னிக்கு இல்லைங்க,
குலசேகர ஆழ்வார்,
அவர்தான் இத்தனையும் செய்தவர்.
கீழே உள்ள பாசுரத்தைப் படியுங்க, உங்களுக்கே புரியும்.
       "ஆரம் கெடப்பரன் அன்பர் கொள்ளார்* என்று அவர்களுக்கே
              வாரம் கொடு குடப் பாம்பில் கையிட்டவன்* மாற்றலரை
        வீரம் கெடுத்த செங்கோல் கொல்லி காவலன்* வில்லவர்கோன்
              சேரன் குலசேகரன் முடி வேந்தர் சிகாமணியெ.
மேலே குறிப்பிட்ட பாடல் அவரைப் பத்தித்தான்
அது குலசேகர ஆழ்வார் பற்றிய சரித்திரம் தெரிந்தால் உஙகளுக்குப் புரிந்துவிடும்.
அது என்னய்யா சரித்திரம் என்கிறீர்களா?
குலசேகரர் சேரநாட்டை ஆண்டு வந்தார்.அவர் வீரமும் விவேகமும் உடைய அரசராக  சிறப்பாக ஆண்டு வந்தார். கடவுள் பக்தி உடையவர்.
ரங்கனாதரிடம் தீவிர பக்தி கொன்டவன்.இவருடைய பக்தி மற்றும் ஆற்றலைக் கண்டு  பான்டிய ராஜா தன் பெண்ணை இவருக்கு மணம் முடித்தான். இவருக்கும் ஒர் ஆண் மகவு  பிறந்த‌து. மகனுக்கு திடவிரதன் என்று பெயர் சூட்டினான்.
நாளாக நாளாக,போரில் பல உயிர்கள் மடிவது குலசேகருக்கு வேதனையைக் கொடுத்தது.
ராமனைப் பற்றி உபன்யாசஙகள் கேட்பதில் ஆர்வம் கொன்டவனாக
இருந்தான்.அந்த சமயத்தில் உபன்யாசகர், ராமன் அசுரர்களை அழிக்க இலக்குமணனை சீதா
பிராட்டிக்கு காவல் வைத்து விட்டு சென்றதை விவரித்துக் கொன்டிருந்தார்.
இதைக் கேட்ட,குலசேகரர உடனே தன் சேன்யங்களை ராமனுக்கு உதவச் செல்லும்படி ஆணை இட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உபன்யாசகர் ராமர் தனியாகவே  அசுரரகளை வென்று விட்டார், மற்றும் இது நடந்தது திரேதாயுகத்தில், இப்போது அல்ல  என்று சொல்ல பின்பு தான் அமைதியானார் என்றால் பார்த்துக்கொள்ளுஙகள்.
இவர் அனுதினமும் பூஜை செய்வதற்காக ஒரு ராமர் விக்கிரஹத்தை சிலை வடிவத்தில்  செய்து பூஜித்து கொன்டே இருந்தார், நாட்டின் மீது அக்கரை இல்லாமல் இருந்து வந்தார்.
இதை அறிந்த அமைச்சர்கள்,இப்படியே போனால் நாட்டின் நிலைமை மோசமாகிவிடும்  என்று நினைத்து, ராமர் விக்கிரஹ்த்தின் மேல் இருந்த ஒரு நவரத்தின மாலையை எடுத்து  ஒளித்து வைத்து விட்டு, அந்தப் பழியை விஷ்னு பக்தர்கள் மேல் போட்டு விட்டனர்  என்றால் பாருங்கள்.
இதை அறிந்த குலசேகரர், புழுவாகத் துடித்தார். "விஷ்ணு பக்தர்கள் ஒரு நாளும் அப்படிச் செய்து இருக்கமாட்டார்கள். அவர்கள் பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைப் பட மாட்டார்கள்" என்று திடமாக நம்பினார்.
இதனை மெய்ப்பிக்க உடனே மெய்க்காவலர்களைக் கூப்பிட்டு ஒரு குடத்தை எடுத்து  வரச் சொன்னார். அதில் ஒரு பாம்பை போட்டார். "விஷ்ணு பக்தர்கள் மாலையை எடுத்து  இருந்தார்கள் எனில் இந்தப் பாம்பு என் கைகளைக் கடிக்கட்டும" என்று கைகளை  குடத்துக்குள் விட்டார். என்ன அதிசியம் பாருங்கள்!
பாம்பு அவரை ஒன்றும் செய்யவிலை.
இதனைக் கணட‌அமைச்சர்கள் மறைத்து வைத்திருந்த மாலையை திருப்பிக் கொடுத்து  தாங்கள் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டனர் என்றால் பாருங்கள்.
இதனைத் தான்
 "வாரம் கொடுகுடப் பாம்பில் கையிட்டவன்"
என்று தனியனாக முன்னர்  பார்த்தோம்.
இப்போது புரிந்ததா, குலசேகரனின் விஷ்ணு பக்தி?
இதனால் மனம் நொந்த குலசேகரர் அரசாட்சியை தன்னுடைய புதல்வனிடம் அளித்து விட்டு,இராமபிரானின் பல்வேறு புனிதத் தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டார்.
இராம பிரானைப் போலவே அரங்கனாதனிடமும் பக்தி கொண்டிருந்தார். தான் நீண்ட நாள்  ஆசைப்படி திருவரங்கத்தில் தங்கி எம்பெருமானை சேவித்து, அவ்வழகிய மணவாளனையே தான் திருமகள் சேரகுலவல்லிக்குத் மணம்செய்வித்தார்.
இன்றும் ஸ்ரீராமநவமி அன்று  அரங்கன் சேரகுலவல்லி நாச்சியாரோடு சேர்த்தி கண்டருளுகிறார். குலசேகரன் வீதி என்று  வழங்கும் மூன்றாவது பிரகாரத்தை அரங்கனுக்குக் கட்டினார்.
திருவேங்கடவனைப் பற்றிப்  பாடும்போது, எழுமலையில் மீன், செண்பகப்பூ, பொன்வட்டில் போன்ற ஏதேனும் ஒன்றாக  இருந்து,
    "படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே"
என்று பெருமானின் முன்னே படியாக இருக்க வேண்டினார். பெருமானும் இவர் பக்தியை மெச்சி  திருவேங்கடவன் முன்னால் உள்ள படிக்கு இவர் பெயரே வைத்து,
"குலசேகரன் படி"
என்றே அருளினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பெருமாளிடம் அதிக பக்தி கொனண்டிருந்ததாலோ என்னவோ,
இவர் "குலசேகரப் பெருமாள்" என்று அழைக்கப்பட்டார்.
குலசேரகப்பெருமாள், பெருமாள் மீது பக்தி சொட்ட சொட்ட பாடல்கள் பாடியுள்ளார்.
அவை "பெருமாள் திருமொழி" என்று அழைக்கப்படுகிறது.
105 பாசுர‌ங்கள் கொண்டதாகும் அது.
இதில் அரங்கனாதனைப் பற்றி முதல் திருவந்தாதியில் பதினோரு பாசுரங்கள் பக்தி சொட்ட சொட்ட பாடியுள்ளார் என்றால் பாருங்கள்.
மேலும் கண்ணபிரானைப் பற்றி வடமொழியில் " முகுந்த மாலை" என்ற பக்தி ரசம்  சொட்டும் பாசுரங்களையும் பாடியுள்ளார். இதில் என்ன முக்கியமானது என்றால்  வடமொழியில் பாசுரங்களை இயற்றிய ஒரே ஆழ்வார் "குலசேகர ஆழ்வார்" மட்டுமே.
குலசேகர ஆழ்வாரை பெருமாள் அணியும் கெளசத்துபம் என்ற மாலையின் அம்சமாகக்  கருதுவார்கள்.
குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்வசு நக்ஷத்திரத்தில் திருவஞ்சிக்களம் என்ற‌
ஊரில் (கேரளாவில் திருச்சூருக்கு அருகாமையில் உள்ளது) பிறந்தார்.
குலசேகர ஆழ்வார் ராமாவதாராம் பற்றி விஸ்தாராமாக பாசுரங்களாகப் பாடியுள்ளார்.
குலசேகர ஆழ்வார்

1 கருத்து:

sahasra சொன்னது…

very nice article appa...